புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஏப்., 2014

ஜெயலலிதா பிரதமரானால் தீவிரவாதம் ஒழியும்: மதுரை ஆதீனம்

நெல்லை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பிரபாகரனை ஆதரித்து பாளை மார்க்கெட் திடலில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கலந்து கொண்டு பேசினார்.



அவர்,  ‘’2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த மதுரை ஆதினத்தின் 292-வது ஆதீனமாக நான் உள்ளேன். இந்த ஆதீனம் தமிழ் வளர்த்த ஆதீனம் எனவேதான் தமிழ்நாட்டை சேர்ந்த ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்று தேர்தல் பிரசாரம் செய்து வருகிறேன்.
கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களும், இந்துகளுக்கும் புனிதயாத்திரை செல்ல நிதி உதவி செய்து வருபவர் ஜெயலலிதா. கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அ.தி.மு.க.வில் உழைத்தவர்களுக்கு மதிப்பு உண்டு. அ.தி.மு.க. கடவுள் நம்பிக்கை கொண்ட கட்சியாகும். ஜெயலலிதா பிரதமரானால்தான் இந்தியாவில் தீவிரவாதமும், பயங்கரவாதமும் ஓழியும். நாடு வல்லரசாக வேண்டுமானால் ஜெயலலிதா பிரதமராக வேண்டும்’’என்று  பேசினார்

ad

ad