புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஏப்., 2014

தமிழீழம் மலரும் துண்டு பிரசுரம் ஒட்டிய இருவர் கைது 
யாழ்.இந்து கல்லூரிக்கு அருகில் தமிழீழம் மலரும் என்ற துண்டுப்பிரசுரத்தினை ஒட்டியவர் என்ற குற்றச்சாட்டில் மேலும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
 
சந்தேகநபர் யாழ்.இணுவில் பகுதியைச் சேர்ந்த மன்மதராசா வேணுகாந்தன் (24) என்ற இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    
 
 
யாழ்.இந்து கல்லூரிக்கு அருகில் தமிழீழம் மலரும் என்ற தலைப்பில் துண்டுப் பிரசுரத்தினை ஓட்டினார் என்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
சந்தேகநபர் யாழ்.கொக்குவில் பகுதியைச் சேர்ந்த ஜெயதாஸன் கஜானன் (24) என்ற இளைஞனே நேற்று கற்றத்தடுப்பு பிரிவினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர் என வாராந்த செய்தியாளர் சந்திப்பின் போது யாழ்.மாவட்ட பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் பாலகசூரிய தெரிவித்துள்ளார்
 
குறித்த இளைஞன் நேற்று முன்தினம் இரவுவேளை துண்டுப் பிரசுரத்தினை ஓட்டியுள்ளார் எனப் தெரிவிக்கப்பட்டதுடன் துண்டுப்பிரசுரமும் அங்கிருந்த அகற்றப்பட்டுள்ளது.
 
 கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad