புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஏப்., 2014


ராஜ்நாத்சிங் இன்று தமிழகம் வருகிறார்: தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர் பொதுக்கூட்டங்களில் பிரச்சாரம்
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியின் வருகையை தொடர்ந்து, அக்கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங்கும் இன்று தமிழகம் வருகிறார். தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.

தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட் சியின் தேசிய தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, சென்னை, கோவை, ராமநாதபுரம், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் 3 நாட்கள் கலந்து கொண்டு பேசினார்.
அவரைத் தொடர்ந்து, பா.ஜ.க. தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) தமிழகம் வருகிறார். இதற்காக, மும்பையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வரும் அவர், பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தஞ்சாவூர் செல்கிறார். அங்குள்ள திலகர் திடலில் மாலை 3 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத்சிங் பேசுகிறார்.
அதனைத் தொடர்ந்து, ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை செல்லும் அவர், காரைக்குடி பாண்டியன் தியேட்டர் அருகேயுள்ள மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மாலை 5 மணிக்கு பேசுகிறார். பின்னர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் விருதுநகர் செல்லும் அவர், இரவு 7 மணிக்கு அங்குள்ள தேஷ் பந்து மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.இந்தக்கூட்டத்தில் விருதுநகர் ம.தி.மு.க. வேட்பாளரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான வைகோவும் கலந்து கொண்டு பேசுகிறார்.

ad

ad