புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஏப்., 2014

இன்றைய ஐ.பி.எல் ஆட்டம்:சுருண்டது சென்னை சூப்பர் கிங்ஸ் 
நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டியில் இன்றைய தினம் சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக நகர்ந்து சென்றது.
 
நாணயசுழற்சியினை தனதாக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
இதன்படி நிர்ணயிக்கப்பட்ட (20) ஓவர்கள் நிறைவில் (4) விக்கெட்டக்களை இழந்து (206) ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
 
சென்னை அணியின் துடுப்பாட்டத்தை பொறுத்த வரையில்...
சுமித் மற்றும் மைக்லம் இருவரின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் அரைசதத்தினை கடந்து சென்றனர்.
 
டி.ஆர்.சுமித் (43)பந்துகளில் (4)சிக்ஸர்கள் அடங்களாக (66)ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
                                                   
 
மைக்கிலம் (45)பந்துகளுக்கு முகம் கொடுத்து (5)சிக்ர்கள் அடங்களாக (67)ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
 
                                                  
 
 பதிலுக்கு (206) ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி (18.5)ஓவர்களில் நிறைவில் (4) விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்த நிலையில் (206) ஓட்டங்களை பெற்று இன்றைய வெற்றியை தனதாக்கியது. 
 
பஞ்சாப் அணியை பொறுத்தவரையில் இன்றைய ஆட்டத்தில்.... 
ஜி.யே.மக்வெல் (43)பந்துகளுக்கு முகம்கொடுத்து (2)சிக்ஸர்கள் அடங்களாக (95)ஓட்டங்களையும் 
 
       
 
டிஏ.மில்லர் ஆட்டம் இழக்காமல் (37)பந்துகளில் (3)சிக்ஸர்கள் அடங்களாக அதிரடியான துடுப்பாட்டத்தின் மூலம் (54)ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றிக்கு வழியமைத்து கொடுத்தார்.
இன்றைய ஆட்டம் ஆரம்பம் முதலே ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக நகர்ந்து சென்றதை அவதானிக்க முடிந்தது. 

ad

ad