புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மே, 2014

ரெக்சியன் கொலை ; கமல் உள்ளிட்ட மூவருக்கும் யூன் 11 வரை விளக்கமறியல் 
news
நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவர் ரெக்சியன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட மூவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்று  உத்தரவிட்டது.


கொலை தொடர்பிலான வழக்கு இன்று மன்றுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே எதிர்வரும் 11ஆம் திகதி வரை இவர்களது விளக்கமறியல் காலத்தை நீடிக்குமாறு நீதிவான் எஸ்.லெனின்குமார்  உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி நெடுந்தீவுப் பிரதேச சபைத் தலைவராக இருந்த ரெக்சியன் புங்குடுதீவில் உள்ள அவருடைய வீட்டில் வைத்து சுட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

இக் கொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட விசேட குற்றத்தடுப்புப் பொலிஸார், சந்தேகத்தின் பேரில் முன்னாள் ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும், வடமாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவராகவும் இருந்த கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட உயிரிழந்த றெக்சியன் மனைவி மற்றும் முச்சக்கர வண்டி சாரதி உள்ளிட்ட மூன்று பேரைக் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

ad

ad