புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மே, 2014

நாவலர் சோலை முன்பள்ளிக்கு பூங்கா அமைப்பு 
ஜனாதிபதி விருதுக்கான சமூகவேலைத்திட்டத்தின் கீழ் யாழ்.இந்துக்கல்லூரியின் சாரணர் துருப்பை சேர்ந்த மாணவனான  த.அஜந்தராஜாவால்
நாவலர் சோலை முன்பள்ளிப்பூங்கா புனரமைக்கப்பட்டு திறப்பு விழா இன்று நடைபெற்றது.

அதன்படி குறித்த சாரணிய மாணவனுடன் யாழ்ப்பாணம் றோட்டறிக் கழகத்தினரும் இணைந்து நாவலர் சோலை முன்பள்ளிப் பூங்காவினை புனரமைத்துள்ளனர்.

எனினும் குறித்த பூங்கா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் றோட்டறிக் கழகத்தினால் அமைக்கப்பட்டு நாவலர் சோலை முன்பள்ளிக்கு வழங்கப்பட்டது. எனினும்  கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக அழிவடைந்திருந்தது.

எனவே குறித்த முன்பள்ளிக்கு பூங்கா அவசியத்தினை கருத்திற்கொண்டு சாரணிய மாணவன் அஜந்தராஜாவினால் இந்த சமூக சேவைத்திட்டம் செயற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





ad

ad