புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மே, 2014


தொண்டர் சேவையாகவே இராணுவத்துக்கு யாழ்.இளைஞர்கள் -அரச அதிபர் தெரிவிப்பு 
news
 யாழ்.மாவட்டத்தில் வேலையற்றிருப்போரை இராணுவத்தில் இணைக்கும் நடவடிக்கை சரியா என்ற கேள்வி ஒன்றை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் எழுப்பினார்.
 
இன்று காலை 9.30 மணியளவில் யாழ்;.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு  கருத்து தெரிவிக்கையிலே அவர் இந்தக் கேள்வியை யாழ்.மாவட்ட அரச அதிபரிடம் எழுப்பினார்.
 
மேற்படி இந்தக் கேள்விக்கு பதிலளித்த யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம் யாழ்.மாவட்டத்தில் வேலையற்றிருப்போர்; தொண்டர் சேவை அடிப்படையில்  இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டதாகவும் இந்த நடவடிக்கை நன்மையை பெற்றுத் தரும் எனவும் அவர் தெரிவித்தார்.
 
இந்த கலந்துரையாடலில் பிரதேச செயலர்கள் கலந்து கொண்டிருந்தனர் அவர்களுக்கும் இதன் நோக்கத்தை இராணுவ உயர் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad