புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மே, 2014


உறவினர்கள் குறித்து அமைச்சர்களுக்கு 4 முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ள நரேந்திர மோடி
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை பொறுப்பு ஏற்றது. அன்று இரவே மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார் மோடி. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டது. 



இந்தநிலையில் நரேந்திர மோடி, தனது அமைச்சர்களுக்கு நான்கு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
அதில் உறவினர்கள் யாரையும் தனிச்செயலாளர்களாக நியமிக்கக்கூடாது. உறவினர்களுக்கு சலுகை அளிக்கக்கூடாது. உறவினர்கள் மற்றும் வாரிசுகளுக்கு ஒப்பந்தங்கள் தரக்கூடாது. பொது விவகாரங்களில், நேர்மையை கடைபிடிக்க வேண்டும் என மோடி உத்தரவிட்டுள்ளார்.

ad

ad