புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூன், 2014


பிள்ளையானை அரசாங்கத்திற்கு எதிராக திசை திருப்ப கூட்டமைப்பு முயற்சி
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை அரசாங்கத்திற்கு எதிராக திசை திருப்ப தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு முயற்சித்து வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் சில இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கைக்கு எதிராக நடத்தப்படும் விசாரணைகளின் போது பிள்ளையான் மற்றும் கட்சி உறுப்பினர்களை அரசாஙகத்திற்கு எதிராக பயன்படுத்திக் கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சித்து வருவதாக குறிப்பிடப்படுகிறது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சில உறுப்பினர்களை சந்தித்து அரசாங்கத்திற்கு எதிராக சாட்சியமளி;க்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரியதாக சிங்களப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
ஈழ இராச்சியமொன்றை உருவாக்க வேண்டுமாயின் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டுமென கூட்டமைப்பு உறுப்பினர்கள், பிள்ளையானின் ஆதரவாளர்களிடம் குறிப்பிட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ad

ad