பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் அடங்கலாக 36 பேருக்கு எதிராகவே வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந் நிலையில் வெலே சுதாவின் விசாரணைகள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் மேற்பார்வையில் இடம்பெறவுள்ளன.
பொலிஸ் மா அதிபரின் விஷேட ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விஷேட பொலிஸ் குழு தொடர்ந்தும் விசாரணைகளை தொடரும் நிலையிலேயே அது அதன் மேற்பார்வை நடவடிக்கைகள் பூஜித ஜயசுந்தரவின் கீழ் கொண்டுவரப் பட்டுள்ளது.
இதன்படி, சந்தேக நபர்கள் கைது செய்யப்படும் வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.