இதன்படி பொதுமக்கள் குறித்த சோதனை சாவடியில் வழமைப்போலவே கண்காணிக்கப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் வடக்கிற்கு மரக்கறி மற்றும் பழங்கள் கொண்டு செல்லும் லொறிகளுக்கு சோதனை சாவடியில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
ஓமந்தை சோதனை சாவடியில் பொதுமக்கள் கண்காணிப்பின்றி பயணிக்க முடியும் என்று முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் அதில் உண்மையில்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயவீர தெரிவித்துள்ளார்.