புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மே, 2015

பிரான்ஸிஸ் ஹரிசன் டுவிட்டரில் வெளியிட்ட முக்கிய போர்க் குற்ற ஆதாரம் - விடுதலைப்புலிகளின் 110 முதன்மை உறுப்பினர்கள் எங்கே?


புலிகளின் மூத்த போராளி பாலகுமாரனும் மகனும் மற்றும் ஒருவரும் இராணுவத்தின் பிடியில் இருப்பதைப் போன்ற ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இப் புகைப் படத்தினை பிரான்ஸ்சிஸ் ஹரிசன் தனது டுவிட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
சிறீலங்கா படையினரிடம் கையளிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் முதன்மை உறுப்பினர்கள் எங்கே?
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி நூற்றுக்கணக்கான விடுதலைப் புலிகள் அமைப்பின் முதன்மை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் படையினரிடம் உறவினர்களால் கையளிக்கப்பட்டனர். இவ்வாறு கையளிக்கப்பட்டவர்களில் 110 பேருடைய விபரங்கள் தொகுக்கப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
படையினரிடம் கையளிக்கப்பட்டு காணாமற்போனவர்கள் தொடர்பிலான ஆய்வுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் யஸ்மின் சுக்கா தலைமையிலான சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்திட்டம் – சிறீலங்கா (International Truth and Justice Project – Sri Lanka (ITJP)) என்ற அமைப்பு இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.
இலங்கைத்தீவில் இடம்பெற்ற போரின் போது போர்குற்றங்களும், மனித குலத்திற்கு எதிரான கொடூரங்களும் இடம்பெற்றதாகவும், அது தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திய ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீ மூனினால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய நிபணர் குழுவின் உறுப்பினராக இருந்தவரே யஸ்மின் சுக்கா ஆவார்.
அவரது தலைமையிலான இந்தக் குழு வெளியிட்டுள்ள இந்த பெயர் பட்டியல் அடங்கிய அறிக்கை, கண்ணால் கண்ட சாட்சியங்கள் மற்றும் சரணடைந்த சந்தர்ப்பத்தில் பதிவுசெய்யப்பட்ட பெயர் விபரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
யத்தம் நிறைவுபெற்று இன்றுடன் ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில், இவர்கள் தொடர்பில் எந்தவித தகவல்களும் இல்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. கையளிக்கப்பட்டவர்களில் பலர் சிறைகளில் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஐயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கையளிக்கப்பட்டவர்கள் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த, வட்டுவாகல் பாலத்திற்கு தெற்கு பகுதியில் அமைக்கப்பட்ட முள்வேலிக்குள் தங்கவைக்கப்பட்டதோடு அவர்கள் தொடர்பிலான தகவல்கள் பதிவுசெய்யப்பட்டன.
இந்நிலையில், அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்பின் தலைமையில் பெரும்பாலான மக்கள் படையினரிடம் கையளிக்கப்பட்டதாக  அறியக்கிடைக்கின்றது. அவர்கள் அதன் பின்னர் பேரூந்துகள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த 110 விடுதலைப்புலி அமைப்பின் முதன்மை உறுப்பினர்கள் மற்றும் முதன்மை நபர்கள் தொடர்பிலான பெயர் விபரங்களை வெளியிட்டுள்ள குறித்த அமைப்பு அவர்கள் குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள் தற்போது இலங்கையில் வசிக்கவில்லை என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது.
பலர் இது தொடர்பில் தகவல் தெரிந்திருந்தும் தங்களுடைய பாதுகாப்புகருதி தகவல்களை வழங்கமறுத்து வருவதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.  கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி படையினரிடம் கையளிக்கப்பட்ட பலரது உறவினர்கள் தற்போது வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.
பாலகுமாரனும் அவரது மகனும் படையினரிடம் கையளிக்கப்பட்ட பின்னர் பிடிக்கப்பட்ட படம்
கையளிக்கப்பட்டவர்களை நேரில்கண்ட சாட்சிகளாக அவர்கள் இருக்கின்ற போதும் பாதுகாப்புக்கருதி அவர்கள் தகவல்கைளை வழங்கமறுத்துள்ளனர். எனினும் பெயர் விபரங்களை வெளியிடவிரும்பாத பலர் இது தொடர்பிலான தகவல்களை வழங்கியுள்ளனர்.
ஒரு சிலர் விடுதலை செய்யப்பட்டிருப்பதோடு, கையளிக்கப்பட்டு காணாமற்போனவர்கள் தொடர்பில் பல்வேறு முறறைப்பாடுகள் மற்றும் வழக்குகள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், 2009 ஆம் ஆண்டுக்கும் 2015க்கும் இடையில் காணாமற் போகடிக்கப்பட்ட்வர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பதில் கூறவேண்டுமென பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் அது தொடர்பிலான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
உலகம் முழுதும் இடம்பெயர்ந்து வாழும் காணாமல் போகடிக்கப்பட்ட்வர்களது உறவினர்கள் தங்களது உறவுகள் உயிருடன் இருக்கின்றார்களா? இல்லையா? என்பது தொடர்பில் அறிந்துகொள்ள எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மனிதனும் சட்ட ஆளுகைக்குள் அங்கீகரிப்பதோடு, சித்திரவதைக்கு உள்ளாதல் அல்லது மனித நேயமற்ற கொடுமையான தண்டனைகள் வழங்கப்படக்கூடாது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கையளிக்கப்பட்ட பின்னர் காணாமல் போகடிக்கப்பட்ட்வர்கள் தொடர்பிலும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னர் இலங்கை படையினரிடம் கையளிக்கப்பட்ட பின்னர் காணாமல் போகடிக்கப்பட்ட்வர்கள் தொடர்பிலும் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்திட்டம் – இலங்கை அமைப்பு, இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கட்டாயமாக காணாமற்போகச் செய்யப்படும் அனைவரது பாதுகாப்பையும் உறுதிசெய்வதோடு, காணாமற்போகடிக்கப்பட்ட்வர்களின் குடும்பங்களிடம் விபரங்களை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை்கு விஜயம் செய்து விசாரணைகளை மேற்கொள்ள, குறித்த குழுவிற்கு அனுமதி வழங்கவேண்டுமென்பதோடு, இதற்கு அரசாங்கம் பூரண ஒத்துழைப்பினை வழங்கவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட 110 பேரின் பெயர் விபரங்கள் வருமாறு:
01    ஆதவா ( செயற்பாடு தெரியாது)
02    அகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு),
03    அம்பி ( செயற்பாடு தெரியாது)
04    அராமுதன் ( இம்ரான் பாண்டியன் படை அணியின் பிரதி தளபதி),
05    ஆர்யன் ( செயற்பாடு தெரியாது)
06    பேபி சுப்பிரமணியம் (இளங்குமரன் ) ( கல்வித் துறை பொறுப்பாளர்),
07    பாலச்சந்திரன் பிரபாகரன் ( பிரபாகரனின் இளைய மகன் ),
08    V.பாலகுமாரன் ( மூத்த உறுப்பினர் )
09    Lt.Col.அருன்நம்பி ( இம்ரான் பாண்டியன் படை அணியின் தளபதி)
10    பாலகுமாரின் மகன் தீபன் ( சூரியதீபன் )
11    பாலதாஸ் ( சிரேஷ்ட உறுப்பினர், நிதித் துறை )
12    பாரி (வெளியக கணக்காய்வு பொறுப்பாளர்)
13    பாபு +1 ( நகை விற்பனை பொறுப்பாளர், மனைவியுடன் சரணடைந்ததாக சொல்லப்படுகிறது),
14    பாபு – இளம்பரிதி (சேரன் வாணிப பொறுப்பாளர் )
15    பவன் கமில்டன் (கடாபியுடன் இருந்தவர், ஆனால் அங்கவீனமானவர்களை பராமரித்தவர்)
16    பாஸ்கரன் ( மணலாறு தலைமையக பொறுப்பாளர்)
17    பாஸ்கரன் ( சொர்ணத்துடன் பனியாற்றியவர், கிளிநொச்சியில் பிறந்தவர் )
18    Lt.Col.சந்திரன் ( இராணுவ புலனாய்வு)
19    எழிலன் (திருகோணமலை அரசியல் பொறுப்பாளர் )
20    எழில்வாணன் மாஸ்ரர் ( பாடசாலை ஆசிரியர் )
21    வன பிதா.பிரான்சிஸ் ஜோசப் ( கத்தோலிக்க பாதிரியார் )
22    கோபி அக்கா (வீரபாண்டியன்) ( ஒரு கையை இழந்தவர், சொத்து மேற்பார்வை)
23    கரிகரன் ( செயற்பாடு தெரியாது)
24    இளம்திரையன் (மார்ஷல்) ( இராணுவ பேச்சாளர் )
25    இளம்பரிதி ( சின்னத்தம்பி மகாலிங்கம்) ( யாழ் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர்)
26    இளம்பரிதி (மகாலிங்கம் சிவாஜினி) ( இளம்பரிதியின் மனைவி)
27    இளம்பரிதி – மகாலிங்கம் மகிழினி ( 10 வயது )
28    இளம்பரிதி – மகாலிங்கம் தமிழொளி (8 வயது)
29    இளம்பரிதி – மகாலிங்கம் எழிலினி (3 வயது)
30    இளம்குமரன் (மணலாறு, கட்டளை அதிகாரி )
31    இளவேங்கை மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)
32    இன்தமிழ் ( செயற்பாடு தெரியாது)
33    இரும்பொறை மாஸ்டர் ( சினைப்பர் அணி பொறுப்பாளர்)
34    இசைபிரியா ( ஊடக பிரிவு)
35    ஜவான் ( புலிகளின் குரல் வானொலி)
36   ஜெயராஜ் ( நிதிப் பிரிவு )
37    காந்தி ( புலனாய்வு பிரிவு, சிறைப் பொறுப்பாளர்)
38    கண்ணன் (அரசியல் பிரிவு, மாணவர் அமைப்பு பொறுப்பாளர்)
39    கங்கன்/ கனகன் ( லோகநாதன் அருணாசலம் ) (அரசியல் பிரிவு, பாதுகாப்பு)
40    கரிகாலன் ( முன்னாள் கிழக்கு மாகாண அரசியல் துறை பொறுப்பாளர்)
41    கருவண்ணன் ( மா வீரர் பணிமனை வாகன பொறுப்பாளர் )
42    கினி ( யோகியின் உதவியாளர், முரண்பாட்டு ஆய்வு நிறுவன பிரதிப் பொறுப்பாளர்)
43    கிருபா மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)
44    குயிலன் ( இராணுவ புலனாய்வு)
45    குமரன் ( பால்ராஜின் மைத்துனர்)
46    குணம் ( சிரேஷ்ட படைத் தளபதி , அனேகமாக திருகோணமலையின் முன்னாள் தளபதி)
47    குட்டி (பாண்டியன் வாணிப பொறுப்பாளர்)
48    லோரன்ஸ் ( வவுனியா மாவட்ட கட்டளை அதிகாரி )
49    மாதவன் ( காவல் துறை பிரதி பொறுப்பாளர் )
50    மஜீத் ( இராணுவ புலனாய்வு- நிர்வாக அதிகாரி )
51    மலரவன் (நிர்வாக சேவை )
52    மனோஜ் ( ஏற்பாடுகள் – ரூபனின் பிரதி)
53   மணியரசன் ( சிரேஷ்ட இராணுவ தளபதி)
54    மாது ( திருகோணமலை இராணுவ பிரிவு )
55    மிரேஷ் ( நிதர்சனம் தொலைக்காட்சி )
56    மோகன் அங்கிள் (கடற்புலிகள் )
57    முகிலன் (இராணுவ புலனாய்வு)
58    முகுந்தன்/ஐந்து ஒன்பது=code ( வட போர் முனையில் தீபனின் பிரதி )
59    நடேசன் (அரசியல் துறைப் பொறுப்பாளர்)
60    நாகேஷ் ( ஒரு கால் இல்லை, நிர்வாக பிரிவு பொறுப்பாளர் )
61    நளாயினி ( பொறுப்பாளர், ஆங்கில கல்லூரி )
62    நளாயினி /நளாகினி (மாலதி படைப்பிரிவு )
63    நேயன் (புலனாய்வு)
64    நீதன் ( தலைமையக பொறுப்பாளர், சொந்த இடம் திருகோணமலை )
65    நிலவழகி (மருத்துவ பிரிவு மருத்துவர், இரு குழந்தைகளின் தாய் )
66    நிஷாந்தன் (கடாபியுடன் இருந்தவர், பின்னர் அங்கவீனமானவர்களை பராமரித்தார்)
67    நிஷாந்தன் மாஸ்டர் (இராணுவ விநியோகம் )
68    பஞ்சன் புலனாய்வு (மகாதேவன் ஞானகரன்) (முக்கியஸ்தர்களில் ஒருவர் )
69    பரா ராதா ( நீதித் துறை பொறுப்பாளர்)
70    Dr.பத்மலோஜானி (கரிகாலனின் மனைவி, மருத்துவ பிரிவு)
71    Lt.Col.பிரபா (புலனாய்வு பிரிவு)
72    பூவண்ணன் (நிர்வாக பிரிவு பொறுப்பு)
73    பூவண்ணன் மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)
74    பிரியன் (சுவாமிநாதர் தயாசிறி) ( நிர்வாகத்துறை பிரதி)
75    புலித்தேவன் (சமாதான செயலகம்)
76    புலிமைந்தன் (யோகியின் சாரதி)
77    புரச்சிகா (அம்பியுடன் கூட இருந்தவர், மேலே பார்க்க )
78    புரட்சி மாஸ்டர் (ஆர். பி.ஜி சினைப்பர் பிரிவு)
79    ரூபன் ( ஏற்பாடுகள் பொறுப்பாளர்)
80    ராகுலன் (யாழ்ப்பாண படைப்பிரிவு பிரதி )
81    ராஜா ( விளையாட்டு துறை, பாப்பாவின் பிரதி, 4 பிள்ளைகளுடன் காணவில்லை)
82    புதுவை இரத்தினதுரை ( கவிஞர், கலை மற்றும் கலாசார பொறுப்பாளர்)
83    Col.ரமேஸ் (இளங்கோ) ( காவல் துறை)
84    Col.ரமேஸ்(சிரேஷ்ட இராணுவ தளபதி)
85    ரேகா மகேந்திரராஜா ( மருத்துவ பிரிவு பொறுப்பாளர்)
86    ரஜித்தன் (மணலாறு மாவட்டம் )
87    ரூபன் ( யாழ்ப்பாண படைப்பிரிவு 3 ஆவது பொறுப்பாளர்)
88    S.தங்கன் (சுதா ) சோமசுந்தரம் சுதாகரன் (அரசியல் துறை பிரதி)
89    சக்தி (வனப் பிரிவு ஒரின்கினைப்பாளர்)
90    சத்யன் ( வளப் பாதுகாப்பாளர்)
91    செல்வராசா (யாழ் மாவட்ட தளபதி )
92    சிலம்பன் (ராதா விமான எதிர்ப்பு பொறுப்பாளர்)
93    சின்னவன் (புலனாய்வு)
94    சித்திரங்கன் (மணலாறு மாவட்டத்துக்கான தளபதி)
95    Lt.Col.சுடரவன் (இராணுவ புலனாய்வு)
96    Lt.Col.தணிகையரசு (இம்ரான் பாண்டியன் படைப் பிரிவு)
97    திலக் (திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி செயலக பொறுப்பாளர்)
98    திலகர் (நிதிப் பிரிவு,விவசாயம், பண்ணைகளை கவனித்து வந்தார் )
99    துவாரகன் வயிரவமூர்த்தி (மாவீரர் துயிலும் இல்லம் மன்னார்)
100    வாகிசன் (ராமநாதன் நிமலநாதன்) ( செயற்பாடு தெரியாது)
101    வீரதேவன் (மகாலிங்கம் ஜெயகாந்தன்) (வங்கிகள் பொறுப்பாளர்)
102    Lt.Col.வைதி (இராணுவ புலனாய்வு)
103    Lt.Col.வள்ளுவன் மாஸ்டர் (ராதா விமான எதிர்ப்பு பிரிவு)
104    வேலவன் (சிரேஷ்ட தளபதி, இம்ரான் பாண்டியன் படை அணி)
105    வேல்மாறன் (கேணல் பிரபாவின் பாதுகாப்பாளர்)
106    வினிதா (நடேசனின் மனைவி )
107    வீமன் (கட்டளை தளபதி)
108    விபுலேந்திரன் (நிதிப் பிரிவு)
109    யோகன் / சேமணன் (அரசியல் துறை)
110    யோகி (முரண்பாட்டு ஆய்வு நிறுவன பொறுப்பாளர்)

ad

ad