புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளராக டாக்டர் சதீஸ் அறிவிக் கப்பட்டது முதல் அதிமுக குடும்ப பின்னனி கொண்ட திமுக வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று திமுவினர் கோரிக்கை வைத்து 7 நாட்கள் தொகுதி முழுவதும் பல்வேறு
ஊர்களில் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள்.
இந்த நிலையில் இன்று திமுக தலைமை தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று வேட்பாளர் சதீஸை மாற்றி அறந்தாங்கி ஒ,செ.வும் ஒன்றியக்குழு தலைவருமான சிவ.வீ.மெய்யநாதனை அறிவித்தது.
இந்த அறிவிப்பு வெளியானதும் தொகுதி முழுவதும் திமுகவினர் பட்டாசு வெடித்த இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
இது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் போது புதுக்கோட்டை தெற்கு திமுக மா.செ. கேபிகே தங்கவேல் தரப்பினர் ஆலங்குடியில் உள்ள திமுக அலுவலகத்தை பூட்டிவிட்டனர்.
இது குறித்து மாசெ தரப்பினர் கூறும் போது.. திமுக வேட்பாளரை மாற்றியதை எங்களால் ஏற்க முடியவில்லை. சதீஸ் புதியவர் என்றால் வேறு யாருக்காவது கொடுக்கட்டும் மெய்யநாதனுக்கு கொடுக்க கூடாது என்று கட்சி தலைமையிடம் வலியுத்துவோம் அதற்காக மாசெ, ஒ.செ க்கள், ந.செ க்கள் கி,செ க்கள் இணைந்து சென்னை செல்கிறார்கள்.
மாற்றம் இல்லை என்றால் பூட்டிய திமுக அலுவலகத்தை திறப்பதில்லை என்றும் தேர்தல் பணியில் இருந்து ஒதுங்குவது என்றும் கூறினார்கள்.
ஆலங்குடி தொகுதியில் வேட்பாளர் மாற்றத்திற்கு பிறகு திமுகவினர் உற்சாக கொண்டாட் டத்தில் இருக்கும் போது அலுவலகம் பூட்டப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேட்பாளர் மாற்றம் - திமுக அலுவலகத்திற்கு பூட்டு -
ஆலங்குடி பரபரப்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளராக டாக்டர் சதீஸ் அறிவிக் கப்பட்டது முதல் அதிமுக குடும்ப பின்னனி கொண்ட திமுக வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று திமுவினர் கோரிக்கை வைத்து 7 நாட்கள் தொகுதி முழுவதும் பல்வேறு
ஊர்களில் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள்.
இந்த நிலையில் இன்று திமுக தலைமை தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று வேட்பாளர் சதீஸை மாற்றி அறந்தாங்கி ஒ,செ.வும் ஒன்றியக்குழு தலைவருமான சிவ.வீ.மெய்யநாதனை அறிவித்தது.
இந்த அறிவிப்பு வெளியானதும் தொகுதி முழுவதும் திமுகவினர் பட்டாசு வெடித்த இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
இது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் போது புதுக்கோட்டை தெற்கு திமுக மா.செ. கேபிகே தங்கவேல் தரப்பினர் ஆலங்குடியில் உள்ள திமுக அலுவலகத்தை பூட்டிவிட்டனர்.
இது குறித்து மாசெ தரப்பினர் கூறும் போது.. திமுக வேட்பாளரை மாற்றியதை எங்களால் ஏற்க முடியவில்லை. சதீஸ் புதியவர் என்றால் வேறு யாருக்காவது கொடுக்கட்டும் மெய்யநாதனுக்கு கொடுக்க கூடாது என்று கட்சி தலைமையிடம் வலியுத்துவோம் அதற்காக மாசெ, ஒ.செ க்கள், ந.செ க்கள் கி,செ க்கள் இணைந்து சென்னை செல்கிறார்கள்.
மாற்றம் இல்லை என்றால் பூட்டிய திமுக அலுவலகத்தை திறப்பதில்லை என்றும் தேர்தல் பணியில் இருந்து ஒதுங்குவது என்றும் கூறினார்கள்.
ஆலங்குடி தொகுதியில் வேட்பாளர் மாற்றத்திற்கு பிறகு திமுகவினர் உற்சாக கொண்டாட் டத்தில் இருக்கும் போது அலுவலகம் பூட்டப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.