புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஆக., 2016

யாழில் களைகட்டியது தாமரைப்பூ வியாபாரம்

நல்லூர் திருவிழா, மற்றும் நாக விகாரை ஆகிய தலங்களுக்குச் செல்லும் மக்கள் தாமரை பூக்களை விரும்பி வாங்குவதால் யாழ்நகரை  அண்மித்த பகுதியான பண்ணை கடற்கரைப் பகுதியில் தாமரைப்பூ வியாபாரம்  பிடித்துள்ளது.   


இப்பகுதியில்  வவுனியா மற்றும் அனுராதபுர பகுதியில் இருந்து வரும்  வியாபாரிளே  இவ்வாறு  வியாபாரத்தை  ஆரம்பித்து  உள்ளனர் . ஒரு பூவில் விலை 10 ரூபா முதல் விற்பனை செய்யப்படுகிறது. 

இப்பிரதேசத்தில் தமது ஓய்வு நேரங்களை கழிப்பதற்காக வரும் மக்கள் மற்றும் வெளிமாவட்ட  உல்லாசப் பயணிகள்   வந்து  இறங்கும் முதல் இடமாக இருக்கின்றமையாலும் இப்  பகுதியில் தாமரை பூ வியாபாரம் சூடு பிடித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கினறனர்.

ad

ad