-

18 செப்., 2026

Ceuta ஆதரவு விவகாரம்: Mbappé-யை கடுமையாக சாடும் தீவிர வலதுசாரிகள்!

www.pungudutivuswiss.com!






பிரெஞ்சு கால்பந்து அணியின் தலைவர் Kylian Mbappé மற்றும் Ibrahima Konaté ஆகியோர் Ceuta மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மேற்கொண்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, தீவிர வலதுசாரி அரசியல் வட்டாரங்களிடமிருந்து கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளனர். Elche–Real Madrid போட்டிக்கு முன்னதாக Ceuta மக்களுக்கு ஆதரவான டி-ஷேர்ட்டை முழுமையாக அணியாமல் இருந்த Mbappé, “துன்பங்களுக்கு முன்னுரிமை நிர்ணயிக்க விரும்பவில்லை” என விளக்கம் அளித்திருந்தார்.Ceuta ஆதரவு விவகாரம்: Mbappé-யை கடுமையாக சாடும் தீவிர வலதுசாரிகள்!!

இந்த நடவடிக்கை தொடர்பாக Rassemblement national (RN) கட்சியின் பல முக்கிய உறுப்பினர்கள் Mbappé மீது நேரடியாக விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். RN நாடாளுமன்ற உறுப்பினர் Kévin Mauvieux, Mbappé குறித்து கடுமையான கருத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். அக்கட்சியின் பேச்சாளர் Julien Odoul, Mbappé மற்றும் Konaté ஆகியோரின் நடவடிக்கையை “வருந்தத்தக்கது மற்றும் Ceuta மக்களின் துயரத்தை அவமதிப்பதாகும்” எனக் குறிப்பிட்டார். இதேவேளை, Marion Maréchal இந்த நடவடிக்கையை “வெட்கக்கேடானது” என விமர்சித்து, ஐரோப்பியர்களின் துயரங்களுக்கு ஏன் அவர்கள் அதே அளவு ஆதரவு தெரிவிப்பதில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த Mbappé, “Ceuta மற்றும் அனைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் எனது முழுமையான ஆதரவு உள்ளது. கால்பந்து வீரராக இருப்பதற்கு முன்பு நான் ஒரு மனிதன். துன்பங்களுக்கு முன்னுரிமை நிர்ணயிக்க விரும்பவில்லை” என அவர் தெரிவித்தார். மேலும், உயிரிழந்த அனைத்து குடியேற்றவாசிகளுக்காகவும் ஒரு அடையாள நடவடிக்கையை மேற்கொள்ள விரும்பியதாக கூறினார். கடந்த ஜூலை மாதம் 30 அன்று தவறான தகவல் பரவியதன் பின்னணியில் 70,000-க்கும் அதிகமானோர் மொரோக்கோ எல்லையை கடந்து Ceuta நோக்கிச் சென்றதால் ஏற்பட்ட சம்பவங்களில் 141 பேர் உயிரிழந்ததாக Association marocaine des droits humains (AMDH) தெரிவித்துள்ளது

ad

ad