புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2012


சீனத் தயாரிப்பான ஆட்லறிகள் புலிகளுக்கு எவ்வாறு கிடைத்தன? இலங்கை இராணுவம் அதிர்ச்சி
முள்ளிவாய்க்கால் கடற்கரையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் 5 ஆட்லறிகள் சீனத் தயாரிப்புக்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. இந்த ஆட்டிலறிகள் விடுதலைப் புலிகளின் கைக்கு எவ்வாறு கிடைத்தன என்பது குறித்து  இலங்கை இராணுவத்தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.
நீலம் புயலினால் ஏற்பட்ட மண்அரிப்பை அடுத்து, விடுதலைப் புலிகளால் கரையோரத்தில் புதைத்து வைக்கப்பட்ட 5 ஆட்லறிகளை இலங்கை இராணுவத்தினர் நேற்று மீட்டுள்ளனர்.

இவை அனைத்தும் சீனாவில் தயாரிக்கப்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இறுதிப்போரின் போது விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் இந்த ஆட்லறிகள் மூன்றரை ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்படாதது குறித்து இலங்கை இராணுவத்தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.
போர் முடிவுக்கு வந்த பின்னர், முள்ளிவாய்க்காலில்  இலங்கை படையினர் 3 ஆண்டுகளாக தொடர் தேடுதல்களை நடத்தியிருந்தனர்.
நீலம் புயலினால், காட்டிக்கொடுக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ள இந்த ஆட்லறிகள் விடுதலைப் புலிகளின் கைக்கு எவ்வாறு கிடைத்தன என்ற விசாரணையை இராணுவத்தரப்பு ஆரம்பித்துள்ளது.
இவை விடுதலைப் புலிகளால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையா அல்லது இலங்கை இராணுவத்தினரிடம் இருந்து கைப்பற்றப்பட்டவையா என்று கண்டறிய விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதேவேளை, முதல்முறையாக ஒரே தடவையில் விடுதலைப் புலிகளின் 5 ஆட்லறிகளை கைப்பற்றியுள்ள இராணுவத்தினர் அந்தப் பகுதியில் தேடுதல்களை தீவிரப்படுத்தியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

ad

ad