நீதிமன்றம் விஜயகாந்த்துக்கு முன்ஜாமீன் வழங்கியது.
சென்னை விமான நிலையத்தில் கடந்த 27.10.2012 அன்று செய்தியாளரை அவதூறாக பேசியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு விஜயகாந்த் மனுதாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் விஜயகாந்த்துக்கு முன்ஜாமீன் வழங்கியது.
இதே வழக்கில் செங்கல்பட்டு தொகுதி தேமுதிக எம்எல்ஏ அனகை முருகேசன் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.