கடலூர்: உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
கடலூர் தேவனாம்பட்டினத்தில் அமைந்துள்ள பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 14.03.2013 காலை முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இந்த நிலையில் இன்று காலை ராம்பிரசாஷ், பாலகிருஷ்ணன், புஷ்பராஜ் மூன்று மாணவர்கள் மயக்கமடைந்தனர்.
மூன்று மாணவர்களையும் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதித்தனர்.