புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மார்., 2013

வவுனியா சிறையில் புலிச்சந்தேக நபர்கள் எதிர்வரும் காலங்களில் தடுத்துவைக்கப்படமாட்டார்கள் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாதுப்காப்பு காரணங்களை கருத்தில் கொண்டே இவர்களை வவுனியாவில் தடுத்துவைப்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டதுடன்  அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைப்பதற்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சந்தேக உறுப்பினர்கள் மட்டுமன்றி நீண்டகால தண்டனை விதிக்கப்படும் குற்றவாளிகளையும் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வவுனியா சிறைச்சாலையில்  அண்மையில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இடமாற்றப்பட்ட சிறை கைதிகளும் அனுராதபுரம் சிறைச்சாலையிலேயே தொடர்ந்தும் தடுத்துவைக்கபடவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை, புனரமைப்பு பணிகளுக்காக முடப்பட்டிருந்த வவுனியா சிறைச்சாலை நேற்று மீண்டும் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

ad

ad