புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மார்., 2013


சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் வாபஸ்
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பாக இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க
வேண்டும், ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 15.03.2013 முதல் அரசு கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் 15.03.2013 வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். போராட்டத்தை வேறு வடிவத்தில் எடுத்துச் செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் அந்த மாணவர்கள் தெரிவித்தனர்.

ad

ad