புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மார்., 2013

தமிழக மாணவர்களின் எழுச்சியும் முதல்வர் ஜெயலலிதாவின் மறைமுக ஆதரவு மயமான சாந்தகுணமும்

உலகமெங்கும் தமிழர் மத்தியில் பர பரப்பாக பேசப்படும் செய்திகள்  இன்றைய தமிழக மாணவர்களின் எழுச்சி மயமான போராட்டங்கள் தான் .அடுத்து என்னநடக்குமோ என்று ஆவலோடு  எம்மை எல்லாம் பக்கக வைக்கும்வகையில் நன்கு ஒழுங்கு மையப் படுத்தபட்டு அவர்கள் நடத்துமுணர்வு பூர்வமான உண்ணாவிரதங்கள் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் சாலை மறியல்கள் எல்லாம் எம்மை மெய் சிலிர்க்க  .ஒரு கவலை இந்த எழுச்சி எல்லாம் எம்மினமும் நாங்கள் உயிருக்குயிராக கட்டி வளர்த்த விடுதலைப் போராட்டமும் 2009 இல் திட்டமிட்டு அளிக்கப் பட்டவேளை வெடித்திருக்க வேண்டும்.எமது ஈழ விடுதலை பாதை சுலபமாக அமைந்திருக்கும்.பரவாயில்லை இப்போதாவது விழித்துக் கொண்டார்களே .
இங்கே கவனிக்க வேண்டிய ஒரு செய்தி என்னவென்றால் இந்த மாணவ புரட்சியை முளையிலேயே கிள்ளி  எறிய  சில சக்திகள்  முனைவது தான் .வெளியில் இருந்து பார்த்தால் இந்த குழப்ப வாதிகளின் செயல் தோற்றம் சரியானதாகவும் நியாயமானதாகவும் தோன்றினாலும் உள்ளே விச ஊசிகள் ஏற்றபட  தயாராக இருக்கும் .உதாராணமாக காங்கிரஸ் தங்கபாலு லயோலா கல்லூரி முன்றல் வந்தமையை கூறலாம் . எத்தனை பட்டாலும் திருந்தாத காங்கிரஸ் மாயைக்  கொள்கைவாதிகள் மக்களிடையே கிளம்பும் உணர்வுகளை மழுங்கடிக்க மறைமுகமாக முயன்று கொண்டே வெளித் தோற்றத்தில் அனுதாபிகளாக காட்சி வருவார்கள் .இவரது வருகையால் காங்கிரஸ் மீது இயல்பாகவே கோபம் கொண்டுள்ள மாணவர்கள் ஏதாவது வன்முறையில் குதிப்பார்கள்.இந்த  சாட்டை வைத்தே  குழப்பலாம்  அல்லது அம்மாவின் காவல் துறையாவது குழப்பும் சமாளிக்க முடியாமல்.கை வைக்கும் இதனால் அம்மாவின் உள்மனதையும்  நாடி பிடித்து பார்க்க வசதியாகும் என்றே கற்பனை  இருந்திருக்கும் . உண்மையிலேயே உலக தமிழர்கள் , மாணவர்களை பாராட்டும் அதே வேளை  அடுத்ததாக முதல்வரையும் அவரது  காவல் துறையையும் தான்  நன்றி பாரட்ட வேண்டும் .சாலை மறியலில் இறங்கிய உடனே அடுத்த நிமிடத்திலே தி மு க தேசோ அமைப்பை பேரூந்தில் ஏற்றிச் சென்ற அதே காவல்துறை தான் இந்த மாணவர்கள் செய்கின்ற எல்லா விதமான போராட்டங் களையும்    அமைதியாக பார்த்து கொண்டே இருக்கிறார்கள்.மேலிடத்து ஆணை இன்றி எதுவும் அசையாத அம்மாவின் ஆட்சியில் இது ஒரு மாற்றம். .மாணவர்கள் கல்லூரி வளாகத்திலே உண்ணாவிரதம் செய்கிறார்கள். சாலையில் இறங்கு கிறார்கள் .முக்கிய பெரிய அரச அலுவலகங்களை முற்றுகை இடுகிறார்கள் .ஒரு பெரிய தபாலகதயிஎ உள்ளே  சென்று பொட்டிய வண்ணம் கைப்பிடி அரச கொடிகளை பிடுங்கி ஏற்கிறார்கள். இரவிரவாக திட்டம் போடுகிறார்கள். அச்சு கூடங்களில் பிரசுரங்கள் பதாகைகள் தயார் செய்கிறார்கள் . வை கோ இன் ம.தி.மு.க வழக்கத்தில் கூட உன்ன விரதம் இருக்கிறார்கள்  இத்தனைக்கும் காவல் துறை எந்த வன்முறை கொண்டும் அடக்க முயலவில்லை..நினைத்தால் சட்டத்தின் எத்தனையோ வழிகள் கொண்டு இவர்களை தூக்கி எறியலாம் .தூக்கி உள்ளேயும் போடலாம்..துவைத்தும் எடுக்கலாம். .இந்த போராட்டத்துக்கு எதிரான அல்லது மாற்றான டெசோ இன் போராட்டக்க ரர்கள் கூட எதாவது நடக்காதா குழம்பாதா என கனவு காண்கிறார்கள்.முதல்வரின் தந்திரம் கண்டு இடிந்து போய் உள்ளார்கள் கிழட்டு நரிகள்..திருச்சியில் மட்டும் ஒரு இன்ஸ்பெக்டரின் காரை மறி த்த போ து அவர்  கொஞ்சம் சினம் கொண்டு ஒரு மாணவனை தாக்கி இருந்தார். பின்னர் சுமுகமான பேச்சின்  மூலம் அமைதி கண்டார்கள் .சிலர் இப்போது அமைதியாக இருக்கும் முதல்வரையும் காவல் துறையையும் சீண்டி பார்க்க  சபல்வேறு உணர்ச்சி கதைகளை கட்டி விடுகிறார்கள்..தமிழக அரசு அடக்க முனைகிற தாம். உதவ முன்வரவில்லையாம்.இப்படியெல்லாம் கூறுவது சரியா' தமிழக அரசு இப்படி பார்த்து கொண்டு இருப்பதே பெரிய உதவி தானே. கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல் துறையை கொண்டு அடக்கி இருக்க முடியாதா ?ஒரு அரச இயந்திரம் மௌனமாக இருந்து உதவுவது பிடிக்கவில்லையா? யார் தான் முதல்வராக இருந்தாலும் தங்களை காப்பாற்ற ஏதாவது செய்து சட்டம் தன்   கடமையை செய்கிறது என்று கூறி விட்டு போயிருப்பார்கள் .மாணவர்களின் போராட்டத்தை இன்னொரு குழப்பம் பிடித் துள்ளது.அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப் பதா எதிர்ப்பதா எனபதே . உண்மையில் அமெரிக்க தீர்மானம் ஒரு கண்துடைப்பு தான்.உப்பு சப்பில்லாத தீர்மானம் ததான் ஆனால் பக்கத்து நாடான சம்பந்தபட்ட இந்தியா இது கூட செய்யாமல் உள்ளதே.அமெரிக்காவின் நடவடிக்கையால் உலகமயமாக்கபட்டுள்ளதே எமது பிரச்சினை.இந்த சிறிய சரக்கில் லாத தீர்மானத்தைக் கூட ஸ்ரீலங்கா நிறைவேற்றாமல் மீண்டும் அடுத்த முறையும் ஐ நா  க்கு இழுபட போகிறது என்பதே உணமை .எது எப்படி போனாலும் உலக நடுகல் எம்மீது இழைக்கபட்ட போர்குற்றங்கள் அழிவுகள் எல்லாவற்றையும் அறிய வாய்ப்பாகி உள்ளதே பெரிய விஷயம்.இந்த பிரச்சினைகள் இத்தோடு நின்று விட போவதில்லைத் தானே.எமது தேசியத் தலைவரின் மௌனிக்கப்பட்ட கொள்கைக்கு கிடைக்கும் வெற்றி படிகளில் உணரக கூட அமையலாம்  . உண்மையிலேயே எம்மினது சகோதர மாணவ சமொக்கதுக்கும் தமிழக  ராசு,காவல் துறை கல்லூரி நிர்வாகங்கள் எல்லாம் எங்கள் நன்றிக்கு உரித்தானவர்களே .நீங்கல் சீண்ட வேநிடைவர்கள் கண்டிக்க வேண்டியவர்கள் தலை மேல் வைத்து கொண்டாடுகிறோமோ நடிகர்கள் அரசியல்வாதிகளையே .ஒரே ஒரு சிம்புவை தவிர மற்றைய கலை குடும்பம் எல்லாம் எங்கே  ஒளிந்து கொண்டார்கள்.டில்லியில் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்காகவும் தங்கள் மேல் போடப்படும் வரிக்காகவும் போராட வந்த கலை உள்ளங்களே நீங்கள் தமிழர்  உள்ளங்களை  திரைகளில் மட்டும் தானா கொள்ளை அடிப்பீர்கள் .நிசத்தில் வேச தாரிகள் தானா '  திரையுலகமே பதில் சொல்ல வேண்டும் .இதில் வேறு அஜித்தும் அர்ஜுனும் எதோ
அறிவிப்பு செய்கிறார்களாம் .செய்வார்கள் தானே  வந்தாரை வாழ வைக்கும் இழிச்ச வாய் தமிழன் இருக்கும் மட்டும் ..
சிவ-சந்திரபாலன் சுவிட்சர்லாந்து -tthamil 8@gmail .com

ad

ad