புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மார்., 2013

StudentsHungerStrike வரும் 20ம் தேதி தொடர்முழக்க போராட்டம். 1 கோடி மாணவர்களுக்கு அழைப்பு. சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில்ஒருங்கிணைப்பாளர் தினேஷ்
பட்டினி போராட்டம் மேற்கொள்ளும்
மாணவத் தோழர்கள் கவனிக்கவும் மற்றும்
கடைப்பிடிக்கவும் வேண்டியது!

நான் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தில்

கைது செய்யப்பட்டு மூன்று மாதம் திருச்சி
சிறையில் இருந்த போது 11-நாட்கள் வரை
பட்டினி போராட்டம் நடத்தியுள்ளேன்.



எனக்கு அடிப்படையில் பட்டினி போராட்டம்
என்பதில் நம்பிக்கை இல்லை.

ஆனால் சிறையில் வேறு எந்த போராட்ட
வடிவங்களும் மேற்கொள்ள வழியில்லை
என்பதால் பட்டினி போராட்டம் மேற்கொண்டோம்.

இன்று ஒரு உன்னதமான லட்சியத்திற்காக,
தமிழகத்தின் எழுச்சிக்காக தன்னை வருத்திக் கொண்டு. பட்டினி போராட்டம் மேற்கொள்ளும் மாணவ தோழர்கள், வீரமாக ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல் போராடி வருவதை அறிந்தோம்.
கோவை, திருச்சி & அண்ணாமலை பல்கலைகழகத் தோழர்கள் அவ்வாறு இருந்து பலர் இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பட்டினி போராட்டம் மேற்கொண்டு வரும் கோவை சட்டக் கல்லுரி மாணவர் பாண்டியனிடம் பேசும் போது ஒரு நாளில் ஒரு லிட்டர் தண்ணீர் மட்டுமே அருந்துவதாக தெரிவித்தார்.

போராட்டத்தில் வைராக்கியம் கட்டாயம் தேவை.
ஆனால் உடல்நலத்தை பாதிக்க விட்டுவிடக் கூடாது.

தூய்மையானநீர் குறைந்தது நாள்ஒன்றுக்கு எட்டுலிட்டர்
முதல் பதினெட்டு லிட்டர் வரை குடிக்க வேண்டும்.
தண்ணீர் நிறைய குடிக்க குடிக்க ஈரல்,குடல் பகுதி பாதிக்காது. உடல் சோர்வு குறையும்.

பட்டினி போராட்டம் முடித்துக் கொள்பவர்கள் கட்டாயம் ஒரு வாரம் வரை திரவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டும்.(பழசாறு, கஞ்சி, இளநீர், மோர் போன்றவை)

நான்சிறையில் பட்டினி போராட்டம் மேற்கொண்டபோது பதினாறு லிட்டர் வரை தண்ணீர் குடித்து வந்தேன்.
இதனால் எனக்கு ஆறு கிலோ எடை மட்டும் குறைந்தது.

மாணவ தோழர்களே உங்கள் உடல்நலனை
அவசியம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்!
எதிர்கால தமிழகம் உங்களை நம்பி உள்ளது!!
போராட்டத்தின் உயரிய நோக்கத்தை கட்டாயம் வென்றெடுப்போம்!!!
தமிழின விரோத, துரோக சக்திகளை களை எடுப்போம்!!!
அடிமை தமிழினத்தின் விடியலை, விடுதலையை படைப்போம்!!

ad

ad