புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 பிப்., 2014


திமுக மாநாடு திடல் : 100 அடி நீள ’இனியவை நாற்பது’ பிளக்ஸ் பேனர்

திருச்சியில் நாளை (15–ந்தேதி) தொடங்க உள்ள தி.மு.க. மாநாட்டு வளாகத்தில் பல்வேறு பிரமாண்ட பணிகள் செய்யப்பட்டுள்ளது. இதில் அனைவரையும் கவரும் வகையில் 100 அடி நீளத்தில் இனியவை நாற்பது, பாராளுமன்றத்தில் நாற்பது என்ற தலைப்பில் தொட்டியம் ஒன்றிய செயலாளர்
சீமானூர் பிரபு வைத்துள்ள பிளக்ஸ் பேனர் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.


கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் இனியவை நாற்பது என்ற தலைப்பில் தமிழர் காலச்சாரம், பாரம்பரியத்தை பரைசாற்றும் வகையில் அதியமானுக்கு அவ்வை நெல்லிக்கனி கொடுத்தல், வள்ளுவர் கோட்டம், அரசர்கள் உள்பட பல்வேறு வகையான பிரம்மாண்ட அலங்கார ஊர்திகள் இடம் பெற்றன. இவை அனைத்தையும் பார்த்து மக்கள் பிரமித்து போயினர்.
இந்த இனியவை நாற்பது வாகன ஊர்தி அணி வகுப்பு அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சரும், திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.என். நேரு தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதை நினைவு படுத்தும் வகையில் நாளை தொடங்க உள்ள திருச்சி மாநாட்டு திடலில் 100 அடி நீளமுள்ள பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
அதில் இனியவை நாற்பது தலைப்பில் இடம்பெற்ற அனைத்து ஊர்திகளின் போட்டோவும் இடம் பெற்றுள்ளது. மேலும் மேலும் வாழும் தமிழே, செம்மொழி மாநாட்டில் தங்களால் கண்டது இனியவை நாற்பது, வளரும் தமிழே, திருச்சி மாநாட்டில் உங்களால் காணப்போவது பாராளுமன்றத்தில் நாற்பது, இவ்விரண்டும் ஏற்று நடத்தும் நேருவின் அழைப்பை எற்று அனைவரும் வாருங்கள் என்று எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ad

ad