புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 பிப்., 2014

திரையுலக ஜாம்பவான் பாலுமகேந்திரா மரணம்! கதறி அழுத பாரதிராஜா, பாலா

இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்த இயக்குனர் பாலுமகேந்திராவின் உடல் திரையுலகினர் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இலங்கையின் மட்டக்களப்பில் 1934ம் ஆண்டில் பிறந்த தமிழரான பாலு மகேந்திராவிற்கு தற்போது வயது 74. ஒரு ஒளிப்பதிவாளராகத்தான் தன் வாழ்க்கையை ஆரம்பித்தார்.
1977ம் ஆண்டு கோகிலா படம் மூலம் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமானார் பாலு மகேந்திரா. இது ஒரு கன்னடப் படம். இந்தப் படம் நேரடியாக தமிழகத்தில் வெளியாகி வெள்ளி விழா கண்டது.
தமிழில் அவர் இயக்கிய முதல் படம் அழியாத கோலங்கள். அந்தப் படத்தில் தொடங்கிய அவரது திரைப் பயணம் ஒரு அழகிய நதியைப் போல தெளிவாக இருந்தது.
ஆர்ப்பாட்டமில்லாத அழகிய வெற்றிகள் மூலம் இந்திய சினிமாவின் முக்கிய படைப்பாளியாக அடையாளம் காணப்பட்டார் பாலு மகேந்திரா.
சமீப நாட்களாக முதுமை மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இருந்தும், அதை வென்று, தலைமுறைகள் என்ற படத்தை இயக்கி நடித்தார்.
அந்தப் படம் அனைவராலும் பாராட்டப்பட்டது. தமிழ் சினிமாவின் முக்கிய படமாகப் பார்க்கப்பட்டது. தனது அடுத்த படத்தை விரைவில் தொடங்கப் போவதாகக் கூறிவந்தார் பாலு மகேந்திரா.
இந்நிலையில் இன்று திடீரென்று அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார். பாலுமகேந்திரா மரணம் தமிழ் சினிமாவைப் பொருத்தவரை நம்ப முடியாத, ஜீரணிக்க இயலாத ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. தமிழ் திரையுலகமே தீராத அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.
கதறி அழுத பாரதிராஜா, மகேந்திரன்
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரும், முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே போன்ற காவியங்களைத் தந்தவருமான மகேந்திரன் இன்று பாலு மகேந்திரா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பாலுமகேந்திரா உடலைப் பார்த்து கதறி அழுதார்.
பாரதிராஜா
பாலுமகேந்திராவின் சமகால இயக்குனர்களில் ஒருவரான பாரதிராஜா, தனது நண்பரான பாலுமகேந்திராவின் மரணத்தை நம்ப முடியாமலும் தாங்க இயலாமலும் கதறி அழதார்.
பாலுமகேந்திரா உடல் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பெட்டி மீது விழுந்து கண்ணீர் விட்டுக் கதறினார் பாரதிராஜா. பாலுமகேந்திராவுடனான தன் நட்பைச் சொல்லிச் சொல்லி அவர் அழுது புலம்பினார்.
சமீபத்தில் ஒரு சினிமா நிகழ்ச்சியில் பாரதிராஜாவைப் பற்றி மிக நெகிழ்வாகப் பேசியிருந்தார் பாலுமகேந்திரா.
பாலா
பாலுமகேந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே வந்துவிட்ட பாலா, பின்னர் உடலருகே கலங்கிய கண்களுடன் இறுக்கமாக அமர்ந்திருந்தார். தமிழ்த் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் அனைவருமே பாலுமகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்த வந்த வண்ணமுள்ளனர்.

ad

ad