புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 பிப்., 2014


சாயல்குடி அருகே பெண் ஒருவர் கத்தியால் அறுத்து மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். சாக்கு பைக்குள் மறைக்கப்பட்டிருந்த நிர்வாண சடலத்தை போலீஸார், வியாழக்கிழமை மாலையில் கைப்பற்றினர்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி-அருப்புக்கோட்டை சாலையில் எஸ்.எம்.இலந்த குளம் விலக்கு மண் சாலையோ ரம் வயல் ஒன்றில், காட்டுக்கருவல் மரங்கள்
மறைவில், நீண்ட பெரிய சாக்கு பைக்குள், வெளியில் கால் பாதங்கள் நீட்டிய நிலையில் சடலம் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர், சாயல்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதைய டுத்து துணை காவல் கண்காணிப்பாளர் சிவசங்கர், காவல் ஆய்வாளர் பால குமார், சார்பு ஆய்வாளர்கள் இருளப்பன், பரமசிவம், குரு, திருமுருகன் ஆகியோர் போலீஸாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பெண் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு, சடலத்தை முழு நிர்வாணமாக்கி, இரண்டு சாக்கு பைகளை ஒரே பெரிய சாக்கு பையாக தைத்து அதற்குள் மறைத்து வைக்கபபட்டிருந்தது. கெலையுண்ட பெண்ணிற்கு சுமார் 28 முதல் 30 வயது. சிவப்பு நிறம். கழுத்தில் தாலியோ, கால் விரல்களில் மிஞ்சிகளோ இல்லை. காதுகளில் மட்டும் தோடுகள் உள்ளன. இவை தங்கமா, கவரி ங்கா? என்பது தெரிய வில்லை. எனவே கொலையுண்ட பெண், திருமணம் ஆகாதவராக இருக்கலாம் என்று கருதப்படு கிறது. நிர்வாண நிலையில் சடலம் கிடந்ததால் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா?  அல்லது தவறான நடத்தை கார ணமாக கொலை செய்யப்பட்டாரா? என்பது மர்மமாக உள்ளது.
சடலம் அருகே கத்தி, கிரிக்கெட் ஸ்டம்ப் மற்றும் சாக்கு கிடந்ததை போலீஸார் கைப்பற்றினர். வெறு எங்கேயாவது கொலை செய்து விட்டு சடலத்தை கொலையாளிகள் தூக்கிக் கொண்டு வந்து போட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. போலீஸ் மோப்ப நாய் கொண்டு வரப்பட்டு, சம்பவ இட த்தில் மோப்பம் பிடிக்க விடப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு சடலம், கடலாடி அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் செல் லப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப் பின்புதான் கொலை நடந்த விதம் குறித்து முழு விவரம் வெளியாகும் என்று தெ ரிகிறது. பெண் மர்மக்கொலை சம்பவம், சாயல்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ad

ad