புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 பிப்., 2014

காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு யாழ்ப்பாணத்தில் 14 முதல் 17 வரை சாட்சியங்கள் பதிவு

நாடு முழுவதிலுமிருந்து 13,700 முறைப்பாடுகள் பதிவு
காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் சாட்சியங்களைப் பதிவுசெய்யவுள்ளது.

யாழ் மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பாக 2000ற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகவும், அனைவரிடமும் சாட்சியங் களைப் பதிவுசெய்ய முடியாது என்பதால் தெரிவுசெய்யப்பட்டவர்களிடமிருந்து சாட்சியங்களைப் பதிவுசெய்யவிருப்பதாக ஆணைக்குழுவின் இணைப்பாளர் கெலி தெரிவித்தார். யாழ்ப்பாணம் செல்லும் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் 14ஆம் திகதி கோப்பாய் பிரதேச செயலகத்திலும், 15ஆம் திகதி சாவகச்சேரி பிரதேச செயலகத்திலும், 16, 17ஆம் திகதிகளில் யாழ் மாவட்ட செயலகத்திலும் சாட்சியங்கள் பதிவுசெய்யப்படவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
முறைப்பாடு செய்தவர்கள் அனைவரி டமும் சாட்சியங்களைப் பதிவுசெய்ய முடியாது என்பதால், நாளொன்றுக்கு குறைந்தது 50 சாட்சியங்கள் வீதம் பதிவுசெய்ய எதிர்பார்த்திருப்பதாகவும், போதியளவு நேரம் இருந்தால் ஏனையவர்களிடமும் சாட்சியங்களைப் பதிவுசெய்ய எதிர்பார்த்துள்ளோம். முறைப்பாடுகள் தொடர்பான அனைத்து விடயங்களும், சாட்சியங்களும் பதிவுசெய்யப்படும் என்றும் ஆணைக் குழுவின் இணைப்பாளர் தெரிவித்தார்.
காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு கடந்த மாதம் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை கிளிநொச்சியில் சாட்சியங்களைப் பதிவுசெய்திருந்தது. இங்கு சுமார் 440 பேரிடம் சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட் டிருந்தது. இதில் 162 முறைப்பாடுகள் குறித்த மேலதிக விசாரணைகளுக்காக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பியுள்ளது.
நாடு முழுவதிலுமிருந்து ஆணைக் குழுவுக்கு 13,700 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதுடன் இவற்றில், பொதுமக்கள் காணாமல் போனது தொடர்பில் 9,300 முறைப்பாடுகளும், பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் காணாமல் போனது தொடர்பில் 4,300 முறைப்பாடுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இந்த ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை அடுத்த மாத இறுதிப் பகுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்படும் என ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆணைக்குழு தொடர்பான இணையத்தளமொன்று விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ad

ad