புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஏப்., 2014



பெங்களூர் தனிக்கோர்ட்டில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆஜராக உத்தரவு ஜெயலலிதாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டது

சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூர் தனிக்கோர்ட்டில் நாளை(சனிக்கிழமை) நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். மேலும் கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து ஜெயலிதாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

சொத்து குவிப்பு வழக்கு
தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இறுதி வாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் வாதிட்டு வருகிறார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய லெக்ஸ் பிராபர்ட்டீஸ் டெவலப்பர்ஸ் நிறுவனம் தங்கள் சொத்து முடக்கத்தை எதிர்த்து பெங்களூர் தனிக்கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதை முன்னுரிமை அடிப்படையில் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் பெங்களூர் தனிக்கோர்ட்டுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
உத்தரவு நகல்
அதன்படி பெங்களூர் தனிக்கோர்ட்டில் அந்த நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டில் அந்த நிறுவனம் மீண்டும் மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீதான விசாரணையின்போது பெங்களூர் தனிக்கோர்ட்டுக்கு சென்னை ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் தனியார் நிறுவனத்தின் அந்த மனுவை பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர் தனிக்கோர்ட்டில் நேற்று நடைபெற்றது. அப்போது சென்னை ஐகோர்ட்டு வழங்கிய உத்தரவை நகலை அந்த தனியார் நிறுவனம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அப்போது எந்த அடிப்படையில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவை பெற்றீர்கள்? என்பது குறித்து நாளை(சனிக்கிழமை) கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதோடு ஜெயலலிதா ஆஜராவதற்கு வசதியாக போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு ஐகோர்ட்டு பதிவாளருக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.
ஜெயலலிதாவுக்கு விலக்கு
இந்த நிலையில் குறுகிய காலத்தில் ஜெயலலிதாவுக்கு போதிய பாதுகாப்பு வழங்க இயலாது என்று கர்நாடக ஐகோர்ட்டு பதிவாளர் சார்பில் தனிக்கோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நேரில் ஆஜராவதில் இருந்து ஜெயலலிதாவுக்கு மட்டும் விலக்கு அளிப்பதாக நீதிபதி பின்னர் அறிவித்தார். இதற்கிடையே சொத்து குவிப்பு வழக்கில் இன்றும்(வெள்ளிக்கிழமை) அரசு சிறப்பு வக்கீலின் வாதம் தொடர்ந்து நடைபெறுகிறது.

ad

ad