புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஏப்., 2014

இப்போதைய செய்தி
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: தப்பித்தார் முஷாரப்
news
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் பண்ணை வீடு அருகே இன்று அதிகாலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.
 
முஷாரபை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த படுகொலை முயற்சியில் இருந்து அவர் அதிர்ஷ்டவசமாக தப்பித்தார்.
 
ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்திற்கு சொந்தமான இருதய நோய் சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த பர்வேஸ் முஷாரப் இன்று அதிகாலை 3 மணி அளவில் அங்கிருந்து பண்ணை வீட்டிற்கு மாற்றப்பட்டார்.
 
பாதுகாப்பு நிறைந்த பைசாபாத் - ரவால் டாம் சவுக் சாலையில் பர்வேஸ் முஷாரப் பாதுகாப்பு வாகனம் கடந்து சென்ற போது சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பாதுகாப்பு வாகனத்தில் இருந்த ஒருவர் படுகாயமடைந்தார். சம்பவ இடத்தில் ஒரு அடி அளவில் பெரும் பள்ளம் ஏற்பட்டது.
 
இந்த சம்பவம் முன்னாள் அதிபர் முஷாரப்பை குறிவைத்தே நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.  மேலும் வெடிகுண்டு சாலை ஓரத்தில் இருந்த சாக்கடை அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 
 
இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பொலிஸார் மேலும் வெடிகுண்டுகள் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறதா என சோதனையில் ஈடுபட்டனர்.

ad

ad