புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஆக., 2015

சவூதி அரேபியாவில் 3 இலங்கையர்களுக்கு சிரச்சேத மரணதண்டனை


சவூதி அரேபியாவில் இன்று திங்கட்கிழமை மூன்று இலங்கையர்களுக்கு சிரச்சேதம் செய்யப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் உட்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவரைக் கொலை செய்து கொள்ளையடித்த குற்றத்துக்காகவே இலங்கையர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
வீடு ஒன்றை உடைத்து நுழைந்த இவர்கள், அங்கிருந்தவரைத் தலையில் அடித்துக் கொலை செய்ததுடன், அங்கிருந்த பணத்தைக் கொள்ளையிட்டதாகவும், சவூதி அரேபிய உட்துறை அமைச்சு தெரிவித்துள்ள்ளது.
இவர்கள் மூவருக்கும், செங்கடல் நகரான ஜெட்டாவில் வைத்து சிரச்சேதம் செய்யப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ad

ad