புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஆக., 2015

யாழ்ப்பாணம் மாவட்டம் - 40 விழுக்காடு 11 மணி வரையிலான வாக்கு விழுக்காடு விபரம்

 
இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழீழ நேரம் காலை 7 மணி முதல் 11 மணி வரையான காலப்பகுதியில், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் பதிவான வாக்கு வீதம் வெளியிடப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டம் - 26 விழுக்காடு
மட்டக்களப்பு மாவட்டம் - 23 விழுக்காடு
யாழ்ப்பாணம் மாவட்டம் - 40 விழுக்காடு
வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது என்று தேர்தல் திணைக்களம் அறிவிப்பு வழங்கியுள்ளதாக ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2ம் இணைப்பு
யாழப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இதுவரை வெளியாகிய தகவல்களின்படி வாக்களிப்பு மந்தகதியில் இடம்பெற்றுவருவதாகக் கூறப்படுகின்றது.
யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் வெளியாகிய தகவல்களின்படி இன்று 11.00 மணிவரைக்கும் 40 வீதமான வாக்களிப்பே இடம்பெற்றுள்ளதாகவும் வாக்களிப்பு நிலையங்களுக்கு மக்கள் சென்று வாக்களிப்பதில் மந்தமான நிலையே காணப்படுவதாகக் கூறப்படுகின்றது.
யாழ்.தேர்தல் மாவட்டத்திலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்லும் நிலையில் மந்தமான நிலை காணப்படுவதாக வாக்களிப்பு நிலையங்களின் விபரங்கள் மூலம் அறியமுடிகின்றது. அதாவது இன்று காலை 11.00 மணிவரைக்கும் 40 சதவீதமான வாக்குக்களே பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல் தொடர்பான கண்காணிப்பாளர்கள் மூலமாக அறியமுடிகின்றது.
நேரம் செல்லும்வரை காத்திருக்காது உடனடியாகவே சென்று வாக்களித்து தமது வாக்களிப்பதற்கான உரிமையை நிலைநாட்டுமாறு அனைத்துத் தேர்தல்கள் கண்காணிப்பாளர்கள் உட்பட்ட அனைத்துத் தரப்பினர்களாலும் வாக்காளர்களிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ad

ad