புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஆக., 2015

யாழ்ப்பாண மாவட்டத்தில் 60 வீத தபால் மூல வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு,தபால்மூல வாக்கெண்ணும் பணிகள்! ஐ.தே.க அமோக வெற்றி?


தபால் மூல வாக்குகள் எண்ணும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தற்போது கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் பிரகாரம் குருநாகல் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியே முன்னிலை வகிக்கின்றது. இரண்டாம் இடத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், மூன்றாம் இடத்தில் ஜே.வி.பி யும் உள்ளன என்று உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
தபால் மூல வாக்குகளில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலிடத்தில் உள்ளது. யாழ்ப்பாணத்தில் சுமார் 60 வீத தபால் மூல வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சிக்கு 23 வீத வாக்குகளும், ஈ.பி.டி.பி.யினர் அண்ணளவாக 7 வீத வாக்குகளையும் மாத்திரமே பெற்றுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் ஐக்கிய தேசியக் கட்சி 60-62 வரையான வீத தபால் மூல வாக்குகளைப் பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அண்ணளவாக 30 வீத வாக்குகளைப் பெற்றுள்ளது

ad

ad