புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2015

மழை வெள்ளத்துக்கு பலியான 23 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி ஜெயலலிதா உத்தரவு

மழை வெள்ளத்துக்கு பல்வேறு சம்பவத்தில் பலியான 23 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்-அமைச்சர்
ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;-

நீரில் மூழ்கி பலி 

கனமழையினால் காஞ்சீபுரம் மாவட்டம், வீரபோகம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதனின் மகன் துரைபாபு என்கிற மணிகண்டன்; வேம்பனூர் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமியின் மகன் விக்னேஷ்; சோழிங்கநல்லூர் வட்டம், கீழ்க்கட்டளைப் பகுதியைச் சேர்ந்த அந்தோணியின் மகன் அமலநாதன் பால்; ஆலந்தூர் வட்டம், ராதா நகரைச் சேர்ந்த கோபால்சாமியின் மகன் தங்கவேலு; ஜமீன் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த பழனியின் மகள் கவிதா; ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜானகிராமனின் மகன் குட்டி என்கிற திருநாவுக்கரசு; திருப்போரூர் வட்டம், அனுமந்தபுரம் வீரபத்திரனின் மனைவி கனகா; அமூர் கிராமத்தைச் சேர்ந்த வேதாச்சலத்தின் மகன் கார்த்திகேயன்; செங்கல்பட்டு வட்டம், கொளப்பாக்கம் ஜானகிராமனின் மகன் சுப்பிரமணி; காஞ்சீபுரம் மாவட்டம், சூணாம்பேடு எட்டியான் என்பவரின் மகன் ஏழுமலை; தழுதாளிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணனின் மகன் சங்கர்; சோழிங்கநல்லூர் வட்டம், பள்ளிகரணை முனுசாமியின் மகன் குணசேகரன்; கணேசனின் மகன் ரமேஷ்; கொட்டிவாக்கம் கோவிந்தசாமியின் மகன் ராமதாஸ்; ஆலந்தூர் வட்டம், நந்தம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ்; மற்றும் அவரது மனைவி கீதா; திருப்போரூர் வட்டம், மேலையூர் கிராமத்தைச் சேர்ந்த ரத்தினம் என்பவரின் மகன் கருணாகரன்; காரணை கிராமத்தைச் சேர்ந்த கருப்பன் என்பவரின் மனைவி அஞ்சலை; காஞ்சீபுரம் மாவட்டம் பெரிய குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பெரியகருப்பனின் மகன் மாணிக்கசாமி ஆகியோர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

மின்சாரம் தாக்கி...

செய்யூர் வட்டம், முதலியார்குப்பம் சீனிவாசனின் மகன் குப்புசாமி; பரசநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பழனியின் மனைவி தேவகி; பனையூர் குப்பனின் மகன் கதிர்வேல் ஆகியோர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காஞ்சீபுரம் மாவட்டம், கொளத்தூர் மாளச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பொன்னனின் மகன் நாராயணசாமி மழையின் காரணமாக மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார்.

23 பேரின் குடும்பத்துக்கு...

அவர்களின் மரண செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். தமிழ்நாட்டில் பெய்த கன மழையின் காரணமாக பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த அந்த 23 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ad

ad