புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மார்., 2013


சென்னை தாம்பரம் அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை
சென்னை மேற்கு தாம்பரம் அருகே இன்று (13.03.2013) அதிகாலை கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


சென்னை மேற்கு தாம்பரம் மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சாதனா என்கிற 19 வயது மாணவி. இந்த மாணவி குரோம்பேட்டையில் உள்ள மகளிர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி படித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களாக மிகவும் சோர்வுடன் இருந்ததாகவும், யாரிடமும் அதிகம் பேசாமலும் சரியாக சாப்பிடாமலும் இருந்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இன்று அதிகாலை 4.30 மணி அளவில் பாத்ரூம் அறைக்கு சென்ற அவர், திடீரென மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார் என்றும் கூறப்படுகிறது. 
உடனே குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து காப்பாற்றுவதற்குள் அவர் உடல் முழுவதும் கருகி உயிரிழந்தார். தாம்பரம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரி செல்லும்போதும், வரும்போதும் யாராவது கிண்டல் செய்து தொந்தரவு செய்தார்களா? காதல் விவகாரம் தொடர்பாக தற்கொலை செய்துகொண்டாரா என்ற பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ad

ad