புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2013



சென்னையில் பழ.நெடுமாறன் கைது


சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற போது பழ.நெடுமாறன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தோர் இன்று முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியிலிருந்து காலை 11 மணிக்கு ஊர்வலமாகச் சென்று முற்று கை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 ஐ.நா.வில் கொண்டு வரப்படும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். ஈழத்தமிழர்கள் தங்கள் எதிர்காலத்தை தாங்களே நிர்ணயம் செய்துகொள்ளும் வகையில் ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பன உள்பட 5 கோரிக்கைகள் போராட்டத்தின்போது வலியுறுத் தினர்.
இந்த முற்றுகை போராட்டத்தின் போது பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டார்.

ad

ad