புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2013



பா.ம.க. எந்த கட்சியுடனும் கூட்டணி வைத்து கொள்ளாது: காடுவெட்டி குரு 
ஈரோடு வடக்கு மாவட்ட வன்னியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பவானியில் மாநிலத் துணைத் தலைவர் பரமேஸ்வரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. 
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக சங்கத்தின் மாநிலத் தலைவர் குரு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசும்போது,  ‘’வரும் பாராளுமன்றத் தேர்ததில் எந்தக் கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது. ஒத்த கருத்துடைய அமைப்புகளுடன் கூட்டணி சேர்ந்து வரும் தேர்தலில் போட்டியிடுவோம். இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும். இதற்கு, இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
மது ஒழிப்புக்காக கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள், விழிப்புணர்பு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வருகிறது. வன்னியர் சங்கம் மது விலக்கு அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால், தற்போது விளம்பரத்துக்காக சிலர்  மது ஒழிப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். வரும் ஏப்ரல் 25-ல் வன்னியர்கள் கூடும் இளைஞர் பெருவிழா மாமல்லபுரத்தில் சித்திரை பவுர்ணமி நாளில் நடை பெறுகிறது. இதில், ஏராளமானோர் கலந்து கொள்ள வேண்டும்’’என்று தெரிவித்தார்.

ad

ad