சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடிக்கும் உரிமையை மத்திய அரசு நிலை நாட்ட வேண்டும்: கனிமொழி
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர் கதையாகியுள்ள நிலையில், கடந்த சில மாதங்களில் மட்டும் 194 மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்துச் சென்றுள்ளதாகமாநிலங்களவையில் பேசிய திமுக உறுப்பினர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
மாநிலங்களவையில் இன்று தமிழக மீனவர்கள் விவகாரத்தை எழுப்பிய கனிமொழி, சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கான உரிமையை மத்திய அரசு நிலை நாட்ட வேண்டும். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் செல்வது தொடர் கதையாகி வருகிறது.
தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் கடந்த 20 மாதங்களாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.