புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 செப்., 2013

சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடிக்கும் உரிமையை மத்திய அரசு நிலை நாட்ட வேண்டும்: கனிமொழி

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர் கதையாகியுள்ள நிலையில், கடந்த சில மாதங்களில் மட்டும் 194 மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்துச் சென்றுள்ளதாக
மாநிலங்களவையில் பேசிய திமுக உறுப்பினர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

மாநிலங்களவையில் இன்று தமிழக மீனவர்கள் விவகாரத்தை எழுப்பிய கனிமொழி, சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கான உரிமையை மத்திய அரசு நிலை நாட்ட வேண்டும். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் செல்வது தொடர் கதையாகி வருகிறது.

தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் கடந்த 20 மாதங்களாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

ad

ad