புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 செப்., 2013

பதவி இல்லாத நேரத்தில் வெளியேறும் துரோகிகள் : அழகிரி ஆவேசம்
திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் மாரி என்பவரது இல்லத்திருமணம் மதுரையில் நடை பெற்றது.   முன்னாள் அமைச்சர் மு.க.ஆகிரி இத்திருமணத்திற்கு தலைமை
தாங்கினார்.   இவ்விழாவில் அழகிரி பேசும்போது,  ‘’ஆரம்பக்கட்டத்தில் இருந்து மாரி என்னிடம் அயராது உழைத்து வருகிறார்.

  அவருடைய இல்ல திருமணத்தில் பங்கேற்பதை பெருமையாக நினைக்கிறேன்.   அதே நேரம் என்னிடம் பதவி இருக்கும் நேரத்தில் ஒட்டிக்கொள்வதும், பதவி இல்லாத நேரத்தில் வெட்டிக்கொள்வதும் வெளி யேறிச்செல்லும் துரோகிகளை அடையாளம் காட்டத்தான் மாரி என்னுடனேயே இருக்கிறார்.


 கூடிய வரையில் துரோகிகளை எல்லாம் அடையாளப்படுத்துவேன்.  ‘’என்று ஆவேசமாக பேசினார். சமீப காலமாகவே திமுக மற்றும் அவரது ஆதரவாளர்கள் இல்ல திருமணங்களை தவிர்த்து வந்த அழகிரி, நேற்றும் இன்றும் கட்சி நிர்வாகிகளின் இல்ல திருமணங்களில் பங்கேற்கிறார். நேற்றைய திருமணத்தில் மணமக்களை வாழ்த்திப்பேசச்சொல்லி மை கொடுத்தும், மைக் பிடிக்காமல் சென்றுவிட்டார்.   இன்று மைக் பிடித்து ஒரு பிடி பிடித்துவிட்டார். 

ad

ad