புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 செப்., 2013

காதல் கணவனை மீட்டு கொடுங்கள் : இளம்பெண் கலெக்டரிடம்  மனு 
   புதுக்கோட்டை மாவட்டம் வத்தனாக்கோட்டை கிராமத்தைச் சேந்த இளம்பெண் பாண்டிச் செல்வி(22) என்பவர் திங்கள் கிழமை இரவு 7 மணிக்கு புதுக்கோட்டை  மனு மாவட்ட
ஆட்சியர் மனோகரனிடம் ஒருகொடுத்தார்.

 அந்த மனுவில்,   நான் திருப்பூரில் வேலை செய்த போது இலுப்பூர் தாலுகா விளாப்பட்டி முருகேசன் மகன் சரத்குமார் என்பவரும் ஒரே கம்பெனியில் வேலை செய்தோம். அப்போது இருவரும் காதலித்து கடந்த 10.7.13 அன்று திருப்பர் மரக்கடை செல்வவிநாயகர் கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். அந்த திருமணம் கோயில் பதிவில் உள்ளது. மேலும் திருமண படங்களும் எடுத்துக் கொண்டோம்.
   இந்த நிலையில் எங்களை ஊருக்கு அழைத்து வந்த அவரது உறவினர்கள் என் தாலியை அறுத்து எரிந்து சரத்குமாரை மிரட்டி இழுத்துச் சென்றுள்ளனர். இது குறித்து நான் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
    இந்த நிலையில் என் காதல் கணவர் சரத்குமாருக்கு நாளை வேறு ஒரு பெண்ணடன் திருமணம் நடக்க இருப்பதாக தெரிகிறது. ஆகவே அந்த திருமணத்தை நிறுத்தி என்னை  என் கணவுருடன் வாழவைக்க கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.


  மனுவுடன் திருமண புகைப்படங்களும் இணைத்து கொடுத்தார்.

ad

ad