புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2014


டிஜிபியை மாற்ற வேண்டும் : தேர்தல் ஆணையத்துக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன், தமிழக போலீஸ் டிஜிபி ராமானுஜத்தை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 இது குறித்து, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பேஸ்புக்கில் தெரிவித்துள்ள கருத்து:
’’சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில், காவல் துறையினரின் ஒருதலைபட்சமான செயல்பாடுகளால் எதிர்க்கட்சியினரின் பிரச்சாரத்திற்கு பல தடைகள் விதிக்கப்பட்டன. மேலும், தேர்தல் பிரச்சாரத்தில் ஆளுங்கட்சியினரின் விதிமீறல்கள் கடைசி வரை நடைபெற்றன.
நாடாளுமன்றத் தேர்தலிலும், ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்களுக்கு காவல்துறை துணை நிற்கும் என்ற சந்தேகம், ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள அனைத்து கட்சியினருக்கும் உள்ளது.
தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபி ராமானுஜம் தற்போது பணி நீட்டிப்பில் உள்ளார். இவர் தமிழக அரசின் தயவை எதிர்பார்த்தே பணியில் உள்ளார். இவரை போன்ற பல அதிகாரிகள் தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என்பதில், எவ்வித சந்தேகமும் இல்லை.
தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் பணி ஓய்வு காலத்திற்கு பிறகு, பல அதிகாரிகள் பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளனர். எனவே இதுபோன்ற அதிகாரிகளை, நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் முக்கிய தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தாமல், வேறு பிரிவுகளுக்கு மாற்ற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று தெரிவித்துள்ளார்.

ad

ad