புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2014

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பொலிஸ் மா அதிபருக்கு மூன்று கோடி ரூபா பெறுமதியான இலஞ்சத்தை கொடுத்துள்ளதாக தெரியவருகிறது.
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை முன்னிட்டு இறக்குமதி செய்யப்பட்ட எஸ் 400 ரக ஹைபிரைட் சுப்பர் பென்ஸ் கார் ஒன்றை ஜனாதிபதி பொலிஸ் மா அதிபர் இலங்ககோனுக்கு வழங்கியுள்ளார்.

வரிச் சலுகையில் இறக்குமதி செய்யப்பட்ட இந்த வாகனத்தின் பெறுமதி ஒரு கோடியே 60 லட்சம் ரூபாவுக்கும் மேல் எனவும் வரி விதிப்புடன் சந்தையில் 3 கோடி ரூபாவுக்கு இந்த கார் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரியவருகிறது.
பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட பயன்பாட்டுக்காவே இந்த வாகனம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனை தவிர குடும்பத்துடன் மாலைதீவு சென்று வருவதற்கான சலுகையும் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ad

ad