புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2014

அழகிரி கொடும்பாவி எரிப்பு : மதுரை திமுகவில் பதட்டம்
மு.க.அழகிரியை திமுகவில் இருந்து நீக்கியது குறித்து, திமுக தலைவர் கலைஞர் இன்று செய்தியாளர் களிடம் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர்,   ‘’தி.மு. கழகத்தின் பொருளாளர்
மு.க. ஸ்டாலின் மீது ஏதோ ஒரு இனம் தெரியாத வெறுப்பு நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதற்கெல்லாம் உச்ச கட்டமாக கடந்த 24ஆம் தேதியன்று விடியற் காலை என்னுடைய வீட்டிற்குள்ளே அவர் நுழைந்து, படுக்கையில் இருந்த என்னிடம் ஸ்டாலினைப் பற்றி புகார் கூறி, விரும்பத் தகாத, வெறுக்கத் தக்க வார்த்தைகளையெல்லாம் மளமளவென்று பேசி என்னைக் கொதிப்படைய வைத்தார்.


நினைத்தாலே என் நெஞ்சு வெடிக்கக்கூடியதும், இதயம் நின்று விடக் கூடியதுமான ஒரு சொல்லையும் அவர் சொன்னார். அதாவது ஸ்டாலின் இன்னும் மூன்று நான்கு மாதங்களுக்குள் செத்து விடுவார் என்று உரத்த குரலில் என்னிடத்திலே சொன்னார். எந்த தகப்பனாராவது இது போன்ற வார்த்தைகளைத் தாங்கிக் கொள்ள முடியும் என்று யாரும் கருத முடியாது. நான் கட்சித் தலைவனாக இருக்கிறவன் என்ற முறையில் அதைத் தாங்கிக் கொண்டேன்’’என்று தெரிவித்தார்.


கலைஞரின் இந்த பேட்டி,  திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதனால்,  மதுரை திமுகவினர் இன்று அழகிரிக்கு எதிராக அவரது உருவபொம்மையை எரித்தனர்.  மாவட்ட அமைப்பாளர் செந்தில்குமாரின் ஆதரவாளரும், அலங்காநல்லூர் ஒன்றிய இளைஞரணி  அமைப் பாளர் கல்யாணகுமார் தலைமையில்மதுரை கூடல்நகரில்  50க்கும் மேற்பட்டோர் கொடும்பாவி எரித்தனர்.
இதனால் மதுரை திமுகவில் பதட்டம் நிலவுகிறது.

ad

ad