புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2014

சென்னை மீனம்பாக்கத்தில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நரேந்திர மோடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: மத்தியில் இருக்கும் அரசு ம
க்களுக்கு நேர்மாறான அரசு. காங்கிரஸ் மீதான் மக்களின் கோபம் இந்த தேர்தலில் வெளிப்படும். தமிழகத்தில் உருவாகியுள்ள பாஜக கூட்டணியை பார்த்து திமுக,அதிமுக கட்சிகள் அஞ்சுகின்றன. மக்கள் மீது திமுக, அதிமுகவுக்கு அக்கறை இல்லை. தமிழக மக்கள் திமுக,அதிமுக ஆகிய இரு கட்சிகளால் சிக்கி தவிக்கின்றனர்.பாஜக அணி சாமன்ய மக்களை உயர்த்தும். மூன்றாவது சக்தியாக பாஜக அணி உருவெடுத்துள்ளது.  மாநிலங்களுடன் ஆலோசித்து தேவைகள் நிறைவேற்றப்படும்.
எழ்மையை விளம்பரத்துக்காக காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்கிறது.  தேர்தல் நேரங்களில் மட்டுமே ஏழைகளின் நினைவு காங்கிரசுக்கு வருகிறது. காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று பேசினார்.

ad

ad