புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2014




மத்தியநிதி அமைச்சர் ப.சிதம்பரம், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் ப.வள்ளல்பெருமானை ஆதரித்து ஏன் பிரசாரத்திற்கு வரவில்லை என காங்கிரஸ்
கட்சியில் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் கே.எஸ்.அழகிரியும், சிதம்பரம் நாடாளுமன்ற தனித் தொகுதியில் டாக்டர் ப.வள்ளல்பெருமானும் போட்டியிடுகின்றனர். ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்திற்கு வருகை தந்த மத்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரம், புதுச்சேரி, கடலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்களான நாராயணசாமி, கே.எஸ்.அழகிரி ஆகியோரை ஆதரித்து நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றார். ஆனால் அருகாமையில் உள்ள சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ப.வள்ளல்பெருமானை ஆதரித்து ஏன் பிரசாரத்திற்கு வரவில்லை என காங்கிரஸார் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து வள்ளல்பெருமான் ஆதரவாளரிடம் கேட்ட போது, போதிய நேரம் இல்லாததால் வரவில்லை. வேறு ஒரு தினத்தில் ப.சிதம்பரம் பிரசாரத்திற்கு வருகிறார் என தெரிவித்தார். கடும் போட்டிக்கு இடையே சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் சீட் பெற்ற டாக்டர் ப.வள்ளல்பெருமான் ஜி.கே.வாசன் ஆதரவாக செயல்படுவதால், பிரசாரத்திற்கு ப.சிதம்பரம் வரவில்லை எனவும் சிலர் தெரிவித்தனர். எனவே சிதம்பரம் தொகுதியில் ப.சிதம்பரம் பிரசாரத்திற்கு வராதது, சிதம்பரம் ரகசியமாகவே உள்ளது.

ad

ad