புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2014



கனேடிய தபால் நிறுவனமானது முத்திரைகளின் விலையை கடுமையாக அதிகரித்திருப்பதாக அறிய முடிகிறது
இதன் அடிப்படையில் தபால் முத்திரைகளுக்கான விலைகள் அவற்றின் தற்போதைய மதிப்பில் இருந்து குறிப்பிட்ட சதவிகித அடிப்படையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. Canada Post
என்னும் பெயர் கொண்ட கனேடியத் தபால் நிறுவனமானது கடந்த டிசம்பர் மாதம், தபால் முத்திரைகளின் விலைகளை அதிகரிக்கப் போவதாக அறிவித்திருந்தது.
கனடாவின் உள்நாட்டுக் கடிதப் போக்குவரது ஏறக்குறைய 35 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் முத்திரைகளின் விலையை 63 சதத்திலிருந்து 85 சதத்திற்கு அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் மொத்தமாக முத்திரைகள் வாங்கும்போது அவர் ஒரு தனிப்பட்ட முத்திரைக்கு 1-டொலர் கட்டணம் செலுத்த நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏற்ப்பாட்டில் சிறப்புத் தகவல் எதுவெனில், “p” என அடையாளமிட்ட முத்திரைகள் விலை ஏற்றத்திற்கு முன்பு வாங்கப்பட்டிருந்தாலும் அவைகள் தொடர்ந்து பயன்பாட்டிற்கு உகந்தவையே எனக் கனேடிய தபால் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ad

ad