புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2015

பா.ஜ. தமிழிசையை தபால்காரருக்கே இப்போதுதான் தெரியும்: போட்டு தாக்கும் குஷ்பு!

 என்னை இந்த உலகத்துக்கே தெரியும்; ஆனால்  தமிழிசை சவுந்தரராஜன், தமிழக பா.ஜ.க. புதிய தலைவர் ஆனது தபால்காரருக்கே இப்போதுதான் தெரியும்
என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 130வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் பூந்தமல்லியில் நடந்தது. இதில் நடிகை குஷ்பு கலந்து கொண்டு உரையாற்றினார்.
தாயாரை அழைத்து வந்த குஷ்பு
இந்த கூட்ட மேடைக்கு தனது தாயாரை அழைத்த நடிகை குஷ்பு, தாம் திமுகவில் இருந்தபோது அதனை தமது தாயார் விரும்பவில்லை என்றும், ஆனால் இந்திரா காந்தி போன்ற தலைவர்கள் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தது குறித்து தமது தாயார் மகிழ்ச்சி அடைந்ததாகவும், தாம் கலந்துகொள்ளும் காங்கிரஸ் கூட்டத்தை நேரில் பார்க்க வேண்டும் என விரும்பியதால் அவரை அழைத்து வந்ததாகவும் கூறி அவரை கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், ''தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் என்னை விமர்சனம் செய்து பேசி இருக்கிறார். காமராஜர் கட்சி, நடிகை குஷ்பு பின்னால் போகிறது என்று கூறியிருக்கிறார். யாரும் என் பின்னால் வரவில்லை. நான்தான் பெருந்தலைவர் காமராஜரின் கட்சிக்கு சென்று இருக்கிறேன். நடிகர், நடிகை என்றால் மோசமானவர்கள் என்பதுபோல் விமர்சித்து பேசியிருக்கிறார்.
பா.ஜ.க. ஆளும் மத்திய அரசில் கேபினட் அமைச்சராக இருக்கும் ஸ்மிருதி இரானி ஒரு நடிகை இல்லையா? நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு வந்தபோது நடிகர் ரஜினியை சென்று சந்திக்கவில்லையா?. அவரை பா.ஜ.க.வுக்கு இழுக்க முயற்சி செய்யவில்லையா?
அதேபோல், அந்த கட்சியின் தலைவர் அமித்ஷா சென்னைக்கு வந்தபோது, நடிகர் நெப்போலியன், இசையமைப்பாளர் கங்கை அமரன், நடிகை காயத்ரி ரகுமான் உள்ளிட்ட சினிமாத்துறையை சேர்ந்தவர்களை பா.ஜ.க.வில் சேர்க்கவில்லையா? நடிகர், நடிகைகளை கட்சியில் வைத்திருக்கும் இவர்கள் என்னை விமர்சிப்பதா?

நடிகையாக இருப்பவர் ஒரு கட்சியின் தொண்டராக இருந்து பணியாற்றுவதில் என்ன தவறு இருக்கிறது? யாருக்கும் என்னைத் தெரியாது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் சொல்லி இருக்கிறார். என்னை தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்த நாட்டுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே என்னை தெரியும். ஆனால், தமிழக பா.ஜ.க. புதிய தலைவர் ஆனது தபால்காரருக்கே இப்போதுதான் தெரியும்.
பாம்பு என்றால் சண்டை போடலாம். பல்லி என்றால் தள்ளிவிட்டு போகலாம். நான் அப்படி அல்ல. ஒரு பெண்ணுக்கு மற்றொரு பெண் எதிரியா? உண்மையாகவே, அவர் என்னைப் பார்த்து பயந்து விட்டார். நான் காக்கை அல்ல. பெண் சிங்கம்'' என்றார்.

ad

ad