இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணைக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை கோரியும், சர்வதேச விசாரணையை ஐ.நா.மனித உரிமை ஆணையம் கொண்டு வர வலியுறுத்த வேண்டும் என்றும், விசாரணைக்கு சர்வதேச நாடுகளுடன் இணைந்து இந்தியா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார் ஜெயலலிதா.
2011ல் இலங்கை மீது பொருளாதார தடை கோரி தீர்மானம் கொண்டு வரப்பட்டது, பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரி 2013ல் பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது