புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2015

இலங்கையின் வெளிவரா தடுப்பு முகாம்கள்! ஐ.நாவில் வெளிவரும் இலங்கைப் பெண்ணின் சாட்சியம்


இலங்கையில் வெளிவராத இரகசிய தடுப்பு முகாம்கள் உள்ளதாக இலங்கையின் கடத்தல் விவகாரம் தொடர்பாக ஐநாவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தெரியவந்துள்ளது.
Forum Asia Franisans Intenational ஆகிய அமைப்புக்கள் இணைந்து நிமல்கா பொர்னான்டோ தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையின் கடத்தல் விவகாரம் தொடா்பான பக்க அறைக் கலந்துரையாடலில் காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் பாரியாரான சந்தியா தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் சா்வதேச மற்றும் தமிழா் மனித உரிமைகள் ஆா்வலர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினா் சி.சிறிதரன் ஆகியோர்களும் கலந்துகொண்டனர்.

ad

ad