புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஏப்., 2016

ஜெ., சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச
நீதிமன்றத்தில் தொடர்ந்த மனு மீதான விசாரணை மே 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சசிகலா தரப்பு வாக்குரைஞர் சேகர் நாபே மே 3ம் தேதி தனது வாதத்தை தொடர்ந்து முன் வைப்பார் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.   அதன் மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் வந்த போது, நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.

ad

ad