புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஏப்., 2020

பிரேக்கிங் நியூஸ் கனடாவில் இருந்து அதிர்ச்சி செய்தி வயோதிபர் முகாமில் மலங்களோடுமனிதஉடல்கள் கொரோனா நோயாளி கண்டதும் ஓடிவிடட தொழிலாளிகள் கொரோனா இல்லாத முதியோரும் கவனிப்பாரற்று இறந்திருக்கலாம்

கொரோனா இல்லாத முதியோரும் கவனிப்பாரற்று இறந்திருக்கலாம் மனிதக்கழிவுகளுக்கு மத்தியில் கிடந்த உடல்கள்: முதியோர் இல்லத்தில் கொரோனாவின் கோரத்தாண்டவம்



தனியார் முதியோர் இல்லம் ஒன்றில் மனிதக்கழிவுகளுக்கு மத்தியில் கிடந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அது சித்திரவதை முகாம் போன்று காட்சியளித்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனடாவிலுள்ள Dorval என்ற இடத்தில் அமைந்துள்ள Résidence Herron என்னும் முதியோர் இல்லத்தில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் வழக்கத்துக்கு மாறாக 27 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர்.

வரிசையாக அமரர் ஊர்திகள் அந்த முதியோர் இல்லத்திலிருந்து வெளியேறுவதைக் கண்ட முதியோர்களின் குடும்பத்தினர், அந்த இல்லத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிய முயன்று வருகின்றனர்.

அங்கு இறந்தவர்கள் எல்லோருமே கொரோனாவால் பலியாகியிருக்க வாய்ப்பில்லை என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கருதும் நிலையில், முதியோர் இல்ல உரிமையாளர்கள் சரியான விளக்கம் கொடுக்கவில்லையாம்.



முதியோர் இல்லத்திலிருந்த ஒரு பெண்ணுக்கு கொரோனா இருப்பது தெரியவரவே, மருத்துவமனையிலுள்ள செவிலியர் ஒருவர் சுகாதாரத்துறைக்கு தகவலளித்துள்ளார்.


தகவலையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த முதியோர் இல்லத்திற்கு செல்ல, அது ஒரு சித்திரவதை முகாம் போல காணப்பட்டதைக் கண்டு அதிர்ந்துபோயிருக்கிறார்கள் அவர்கள்.

இரண்டு நோயாளிகள் தங்கள் படுக்கையில் இறந்து கிடக்க, படுக்கையிலிருந்து சிலர் கீழே விழுந்துகிடந்திருகிறார்கள்.

பல நாட்களாக கவனிக்கப்படாத நோயாளிகள் சிலரின் டயப்பர்கள் மாற்றப்படாமல் உடல் முழுவதும் மலம் பூசப்பட்ட நிளையில், பல நாட்களாக உணவோ தண்ணீரோ இல்லாமல் சிலர் கிடந்துள்ளார்கள்.

இல்லத்தின் இரண்டாம் தளத்திலுள்ள அனைவருக்கும் கொரோனா தொற்றியுள்ளது. பல பணியாளர்கள் பயந்து ஓடிப்போக, அந்த தளத்தில் வெறும் இரண்டு பணியாளர்கள் மட்டுமே இருந்திருக்கிறார்கள்.


விடயம் வெளியில் வந்ததும் சிலர் தங்கள் உறவினர்களை அங்கிருந்து அழைத்து வந்துவிட, அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் துவங்கியுள்ளார்கள்.

ad

ad