-
19 பிப்., 2014
18 பிப்., 2014
மூவர் தூக்கு ரத்து ; ஜெ.,வுக்கு வைகோ கோரிக்கை
ராஜீவ்கொலை வழக்கில் 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு ரத்து ஆனது இன்று.இதையுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மூவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ராஜீவ்கொலை வழக்கில் 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு ரத்து ஆனது இன்று.இதையுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மூவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
தூக்கு ரத்து : பேரறிவாளன் தாயார் உருக்கம்
சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டது குறித்து பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், ’’மூவரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. முவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பளித்த தலைமை நீதிபதி சதாசிவம் அமர்வுக்கு நன்றி’’ என்று தெரிவித்தார்.
மூவர் தூக்கு ரத்து ; ஜெ.,வுக்கு வைகோ கோரிக்கை
ராஜீவ்கொலை வழக்கில் 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு ரத்து ஆனது இன்று.இதையுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மூவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ராஜீவ்கொலை வழக்கில் 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு ரத்து ஆனது இன்று.இதையுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மூவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
தேமுதிகவின் அடுத்த அதிருப்தி எம்எல்ஏவா?
தேமுதிகவைச் சேர்ந்த மயிலாடுதுறை எம்எல்ஏ பால.அருள்செல்வன் திங்கள்கிழமை சட்டமன்றத்திற்கு சென்றபோது, அதிமுகவைச் சேர்ந்த பூம்புகார் எம்எல்ஏ எஸ்.பவுன்ராஜை சந்தித்துப் பேசினார். இவர்கள் சந்தித்துப் பேசியதை பார்த்த அங்கிருந்தவர்கள், அருள்செல்வன் தேமுதிகவின் அடுத்த அதிருப்தி எம்எல்ஏவா? என கிண்டலடித்தனர்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 3 பேர் தூக்கை ரத்து செய்யக்கோரும் தீர்ப்பு நாளை
ராஜீவ் கொலைவழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையைக் குறைக்கக் கோரும்
புதிய இணையதளம்...!
"www.dmkforpeople.com’’என்ற பெயரில் தி.மு. கழகத்தின் புதிய இணையதளத்தினை தலைவர் கலைஞர் அவர்கள், (16-2-2014) அன்று வரலாறு படைக்கும் திருச்சி, தி.மு.க. 10வது மாநில மாநாட்டு மேடையில் துவக்கி வைத்தார்.
"www.dmkforpeople.com’’என்ற பெயரில் தி.மு. கழகத்தின் புதிய இணையதளத்தினை தலைவர் கலைஞர் அவர்கள், (16-2-2014) அன்று வரலாறு படைக்கும் திருச்சி, தி.மு.க. 10வது மாநில மாநாட்டு மேடையில் துவக்கி வைத்தார்.
17 பிப்., 2014
மட்டக்களப்பை சேர்ந்த ஒருவரை கூட்டமைப்பின் தலைவராக நியமித்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவேன்-!- கருணா
தமிழ் தேசிய கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த ஒருவரை தலைவராக நியமித்தால் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து தான் ஒதுங்குவதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சவால் விடுத்துள்ளார்.
இறுதிநாள் சாட்சியப்பதிவுகள் ஆரம்பம்
ஜனாதிபதி ஆணைக்குழுவினால் காணாமல் போனோர் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாட்சியப்பதிவுகள் இன்றையதினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகி
ஜனாதிபதி மஹிந்த பாசிக்குடா கடற்கரைக்கு விஜயம்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று மட்டக்களப்பு பாசிக்குடா கடற்கரைக்கு விஜயம் செய்தார்.பாசிக்குடா கடற்கரைக்கு சென்றிருந்த ஜனாதிபதி அங்கு வந்திருந்த மக்களுடன் கலந்துரையாடினார்.ஜனாதிபதியுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஜீன்வாஸ் குணவர்தன, லொஹான் ரத்வத்தை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து ஆகியோரும் பாசிக்குடா சென்றிருந்தனர்.
புலிகளுக்கு புனர்வாழ்வளித்திருக்காவிட்டால் 12 ஆயிரம் தோட்டக்களே செலவாகியிருக்கும்!- மகிந்த அமரவீர
யுத்தம் முடிவடைந்த பின்னர் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு பயிற்சிகள் வழங்காது போயிருந்தால் வெறும் 12 ஆயிரம் தோட்டக்கள் மட்டுமே செலவாகியிருக்கும் என இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
கொக்குவில் வளர்மதி சனசமூக நிலையம் அழைக்கப்பட்ட கழகங்களுக்கு இடையே நடத்தும் அமரர்களான விக்ரம், இராஜன்,கங்கு ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான 30 பந்துப்பரிமாற்றங்களுக்கு மட்டுப்படுத்திய கிரிக்கெட் ஆட்டம் ஒன்றில் கே.சி.சி.சி. விளையாட்டுக்கழகம் 35 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் யாழ்ப்பாணம் காமாட்சியம்பாள் விளையாட்டுக்கழகமும் கொக்குவில் கே.சி.சி.சி விளையாட்டுக்கழகமும் மோதிக்கொண்டன.
54பேர் இன்று சாட்சியமளிப்பு
யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள பகுதிகளில் இருந்து 54 பேர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியம் அளித்துள்ளனர்.
குடும்ப தினம் ஒரு தேசிய சட்ட விடுமுறை தினம் அல்ல. ஆனால் டொரோண்டோ பகுதிகளில் பல தொழில்கள் இந்த தினத்தைக் கொண்டாடுவதற்காக மூடப்படும். திங்கட்கிழமை பிப்ரவரி 17 ஆம் தேதி மூடப்படும் தகவல்கள் இதோ.
மூடப்பட்டிருப்பவை:
- தொடக்க மற்றும் உயர்நிலை பள்ளிகள்
- சிட்டி ஹால் உட்பட மாநகர கட்டிடங்கள்
- பொது நூலகங்கள்
- வங்கிகள்
இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது நிய+ஸிலாந்து
இந்தியாவுடனான இரண்டாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் அணித் தலைவர் பிரின்டன் மெக்கலமின் சதத்தினால் நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்துக் கொண்டது.
நியூஸிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 94 ஓட்டங்களை பெறுவதற்குள் முதல் நான்கு விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தடுமாறியது.
புலனாய்வு இன்ஸ்பெக்டர் சடலமாக மீட்பு
தனிப்பட்ட குடும்ப தகராறினால் தற்கொலை
நேற்று முன்தினம் மாலை 5.50மணியளவில் தனது உத்தியோகபூர்வ பிஸ்டலை கடமை நிமித்தம் பெற்றுக் கொள்வதாக கூறி எடுத்துச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் தெஹிவளை பொலிஸ் நிலைய பதிவுப் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளமை விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
* அத்துருகிரிய வயல்வெளியில் சடலம்;
* கைத்துப்பாக்கி, மனைவி எழுதிய கடிதமும் கண்டெடுப்பு
உத்தியோகபூர்வமற்ற தேர்தல் அலுவலகங்களை, அகற்றுமாறு தேர்தல்கள் ஆணையர் உத்தரவு
மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் உத்தியோகபூர்வமற்ற தேர்தல் அலுவலகங்களை அகற்றுமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய பொலிஸ் திணைக்களத் திற்கு நேற்று உத்தியோ கபூர்வ அறிவிப்பினை விடுத்துள்ளார்.
இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை கேட்டு நவநீதம்பிள்ளை-இவர் இலங்கை அரசுக்கு எழுதிய அறிக்கை வெளியான மர்மம் என்ன ?
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, வரும் மார்ச் மாத அமர்வில் சிறிலங்கா குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.
போர்க்குற்ற விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் மறுப்பது ஏன்?
கேர்ணல் ஹரிகரன் இந்திய இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், பிராந்திய பாதுகாப்பு விவகாரங்களில் கூடுதல் அக்கறை செலுத்தி வருகின்ற ஒருவர். அவர் இதற்கு முன்னர் இவ்வாறு கூறியதாக கேள்விப்படவில்லை.
காணாமல் போனோர் பற்றி சர்வதேச விசாரணைக்கு கோரினேன்: ஜெனிவா சென்று திரும்பிய அனந்தி-பி.பி.சி
சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் பலவற்றையும் ஜெனிவாவில் உள்ள சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து போரினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் சிறுவர்களின் நிலைமைகள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பாக கண்துடைப்பு நடவடிக்கை என்று சொல்லத்தக்க வகையிலான உள்ளுர் விசாரணைகள் என்பன தொடர்பாக விபரமாக எடுத்துக் கூறியிருப்பதாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
புலனாய்வுப் பிரிவினர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.உடற்பயிற்சி நிலையம் என்ற பெயரில் பாரிய வீடுகளை வாடகைக்கு அமர்த்தி இந்தக் குழுக்கள் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு வருகின்றன.
யாழ்.குடாநாடு படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட நிலையில் படையினர் சீருடையுடன் ஆயுதங்கள் தாங்கியவாறு எங்கள் வீடுகளுக்குள் நுழைந்து எங்களை தாக்கிவிட்டு பிள்ளைகளை கொண்டு சென்றனர்.
அவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்கள் எங்கே? எங்கள் பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் என காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக நேற்றும் உறவினர்கள் கண்ணீர்மல்க சாட்சியமளித்துள்ளனர்.
ஆணைக்குழுவின் 2ம் அமர்வு நேற்றய தினம் சாவகச்சேரி பிரதேச செயலர் அலுவலகத்தில் நடைபெற்றிருந்தபோதே மக்கள் மேற்படி சாட்சியத்தினை கண்ணீர்மல்க வழங்கியிருக்கின்றனர்.
சாட்சியத்தில் மக்கள் கூறுகையில்,
முள்ளிவாய்க்காலில் கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரான யோகரத்தினம் யோகி இராணுவத்தினரிடம் சரணடைந்ததாக அவரது மனைவியினால் இன்று ஆணைக்குழுவிடம் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்க மதகுரு பிரான்ஸிஸ் ஜோசப் முன்னிலையில் இராணுவத்தினரிடம் தனது கணவன் உட்பட பல போராளிகள் சரணடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கூட்டணி குறித்து விரைவில் முடிவு: விஜயகாந்த்
டெல்லியில் இருந்து திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர்,
நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். தமிழக மக்கள் மற்றும் மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசியதாக கூறினார்.
சட்டமன்றத்தில் பேச வாய்ப்பில்லை என்று சொன்னால் அதிமுகவோடு இருந்து என்ன பலன்: கிருஷ்ணசாமி பேச்சு
எந்த ஒரு செயலுக்கும் காலம் முக்கியம் என்று சொல்லுவார்கள். இந்த மாநாட்டை ஒரு மாதத்திற்கு முன்பு கூட்டியிருந்தாலும் சிறப்பு இருந்திருக்காது. ஒரு மாதம் கழித்து கூட்டியிருந்தாலும் முக்கியத்துவம் இருக்காது. இதுதான் சரியான தருணம். ஏனென்றால், இம்மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.
கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்தோம். மூன்று வருடத்தில் ஒரு மாற்று முடிவு எடுக்கும் சூழல் ஏன் வந்தது. ஆளும்கட்சி கூட்டணியில் இருந்து யாரும் வெளியே வரமாட்டார்கள். வரக்கூடிய சூழ்நிலை உருவாகாது. நானும், மனித நேய மக்கள் கட்சியும் ஒரு முடிவு
16 பிப்., 2014
ஐக்கிய நாடுகள் சபையின் 25 ஆவது மனித உரிமை மாநாட்டில் ஈழத் தமிழருக்கான நீதி கோரி தொடர் கவன ஈர்ப்புப் போராட்டம் 14.02.2014 அன்று ரொறன்ரோவில் இடம்பெற்றது.
மாலை 3:00 மணியளவில் British Consulate, Toronto, Bay & College St, Toronto, ON எனும் இடத்தில் ஆரம்பமான கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஏராளமான மக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பதாதைகளை ஏந்தியவாறு பங்கேற்றனர்.
பாலுமகேந்திரா என்றொரு ஆளுமை
சம்பந்தன் எதேச்சதிகாரமாம்: மாவை பதவி துறப்பு முயற்சி!
ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி-எழுதுகிறது அரச ஊடகம் ஒன்று
பாராளுமன்ற கூட்டங்களின் போதும் கூட்டமைப்புக்குள் அங்கத்துவம் வகிக்கும் கட்சிக ளின் தலைவர்கள் சந்திப்பின் போதும், சம்பந்தனுக்கும், மாவைக்கும் இடையே அடிக்கடி கருத்து முரண் பாடுகள், மோதல்கள் வருவதுண்டு.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)